Friday 29 June, 2012

enna nadakkuthu என்ன நடக்குது:  கிட்டத்தட்ட 35  ஆண்டுகளுக்கு பிறகு தீக்கதிர் (பத்...

enna nadakkuthu என்ன நடக்குது:  கிட்டத்தட்ட 35  ஆண்டுகளுக்கு பிறகு தீக்கதிர் (பத்...:  கிட்டத்தட்ட 35  ஆண்டுகளுக்கு பிறகு தீக்கதிர் (பத்திரிகையின் பொன்விழா ஆரம்ப  விழாவில்) அலுவலத்தில்:  தோழர் சங்கரையாவின்  பேச்சை  கேக்க ...
 கிட்டத்தட்ட 35  ஆண்டுகளுக்கு பிறகு தீக்கதிர் (பத்திரிகையின் பொன்விழா ஆரம்ப  விழாவில்) அலுவலத்தில்:  தோழர் சங்கரையாவின்  பேச்சை  கேக்க
 ஒரு ஆசை.   வயதானாலும் சிங்கம் சிங்கம்தான்.  வெகு  நாட்களுக்கு பிறகு செவிக்கு உணவில்லை,   விருந்தே கிடைத்தது. இன்னும் சில நல்ல(கண்ணு) அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள், இந்த மக்களை வழி நடத்த.

enna nadakkuthu என்ன நடக்குது: தீக்கதிர்-பொன்விழா :  தினக்கூலி தொழிலாளர்களின் பி...

enna nadakkuthu என்ன நடக்குது: தீக்கதிர்-பொன்விழா :
 தினக்கூலி தொழிலாளர்களின் பி...
: தீக்கதிர்-பொன்விழா :     தினக்கூலி தொழிலாளர்களின் பிரச்சினைக்காக தீக்கதிரில் இருந்து ஒரு தலைவர் வந்து சங்கத்தை பதிவு பண்ண...
தீக்கதிர்-பொன்விழா :
 

 
தினக்கூலி தொழிலாளர்களின் பிரச்சினைக்காக தீக்கதிரில் இருந்து ஒரு தலைவர் வந்து சங்கத்தை பதிவு பண்ணி கொடுத்தார்.அப்படி அறிமுகம் ஆகி, எமர்ஜன்சி பீரியடில் தோழர்களுக்கு சமையல் செய்வது, பொருள்கள் வாங்கி வருவது என்று பழகியதால், தொழிற்சங்க கூட்டங்களுக்கு ஏ.கே.கோபாலன்,
நம்பூதிரி பாடு,கல்யாணசுந்தரம் ஆகியோரை அழைத்து வரும் வாய்ப்புகள் கிடைத்தது.
வயதின் காரணமாக ஏடாகூடமாக கேள்விகள் கேட்பேன். அதில் ஒன்று:நம் கட்சி உழைக்கும் மக்களுக்காகத்தானே போராடுகிறோம்! ஆனால் அவர்கள் நம்மை ஏன் ஆதரித்து ஓட்டு போடுவதில்லை?    இன்றுவரை எனக்கு திருப்தி அளிக்கும் வகையில் பதில் கிடைக்கவில்லை.
ஒரு கட்சி பத்திரிக்கை அதுவும் உண்மையான நடுநிலையோடு,மக்களின் பிரச்சனைகளை மட்டுமே மையப்படுத்தி  நடத்துவது,மிக,மிக,மிக,கடினம்.
கொள்கைபிடிப்போடு, குறைந்த வருமானத்தில் வேலை செய்யும் அந்த தோழர்கள் .............(உங்களுக்கு பிடித்த மிக நல்ல உயர்வான வார்த்தையை போட்டுக்கொள்ளுங்கள்.).
"தோழர் சங்கரையா சொன்ன அறிவுரை எல்லா பத்திரிக்கை நடத்துவோருக்கும் பொருந்தும். விற்பனையை அதிகரிக்க அதிக சந்தாதாரர்களை சேருங்கள்.பத்திரிக்கையின் எண்ணிக்கை லட்சங்களை தொட வேண்டும்."
ஒத்த கருத்துள்ள நண்பர்களை அணுகினால் இது ஒன்றும் முடியாததில்லை.முதல் சந்தா-முக நூல்-நண்பராக நான் தருவதோடு, நண்பர்களையும் வாங்க சொல்லுவேன்.


Thursday 28 June, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: பிறந்த நாளும், குழப்பங்களும்-பிறந்த நாளை கொண்டாடுவ...

enna nadakkuthu என்ன நடக்குது: பிறந்த நாளும், குழப்பங்களும்-பிறந்த நாளை கொண்டாடுவ...: பிறந்த நாளும், குழப்பங்களும்  : மாலையில் வீடு திரும்பிய மகள் கேட்டாள் "அப்பா, இன்னிக்கு உனக்கு பிறந்த நாளா?" "சர்டிபிகேட் படி ஆமாம்." "ப...

பிறந்த நாளும், குழப்பங்களும்-பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது.

பிறந்த நாளும், குழப்பங்களும் :
மாலையில் வீடு திரும்பிய மகள் கேட்டாள் "அப்பா, இன்னிக்கு உனக்கு பிறந்த நாளா?"
"சர்டிபிகேட் படி ஆமாம்."
"பேஸ் புகல வாழ்த்துக்கள் பார்த்தேன்!"
"அப்போல்லாம், ப்ளே ஸ்கூல் கிடையாதேம்மா. அதிக குறும்பு செய்ததால், ஒரு வருடம் முன்னேயே 4 வயதிலேயே ஸ்கூலில் சேர்க்க பிறந்த தேதிய மாத்தி குடுத்துட்டாங்க."
"எங்க அம்மா தான் என் பிறந்த நாளை ஞாபகம் வைத்து கொண்டாடுவார்கள்.எனக்கு பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது.
நான் அன்று வீட்டிற்கே வரமாட்டேன்! இரவு இரண்டாவது ஷோ முடிந்ததும்தான் வருவேன்!
திருமணத்திற்கு பின்பும் இது தொடர்ந்தது. இப்போது கூட உங்கள் மகிழச்சிக்காகதான் புது துணியை கூட அணிகிறேன்!"
"ஆமாம், இப்போதுகூட பிறந்த நாள் அன்னிக்கு காலையில் சென்று  இரவில் தானே வருகிறீர்கள். அப்படி எங்க தான் போறீங்க!"
"ஏதாவது ஒரு முதியோர் இல்லத்திலோ, ஆதரவற்றோர் இல்லத்திலோ உணவு பரிமாறி விட்டு, உண்டு, அன்றைய பொழுதை அவர்களுடன் கழிப்பேன்! "
இதை இன்று வரை யாரிடமும் சொன்னது கூட கிடையாது.

Wednesday 27 June, 2012

சென்னை 7-வது மண்டலம்-அம்பத்தூர்-கூட்டம் இன்று நடந்தது.இந்த கூட்டத்திற்கும் அ.தி.மு.க.உறுபினர்கள் கலந்துகொள்ளாததால், சாதாரண


கூட்டமாகிவிட்டது.உறுப்பினர்கள் குப்பை  தேங்கி கிடப்பதையும்,குடிநீர் சரியான முறையில் விநியோகிக்க ப்பட வில்லை என்று புகார் கூறினர்.ஜோனல் அலுவலர் பொறுமையாக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.மாமன்ற உறுப்பினர்கள்,ஆண்ட்ருஸ்,நீலகண்டன்,தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Monday 25 June, 2012

தி.மு.க.வின் போராட்டம்


தி.மு.க.வின் முக்கிய தலைவர்களை பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவதிலேயே குறியாக இருக்கும் ஜெ .அரசை எதிர்த்து ஜூலை 4-ந் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். மாவட்ட,வட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு நடத்தப்பட இருக்கும் இந்த ஆர்பாட்டத்தில் யார் யார் பங்கு பெறுவார்கள் தலைமை ஏற்பார்கள் என்பது பற்றி ஆ லோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் தலைமையில் அம்பத்தூரில் நடைபெற்றது.புரசை ரங்கநாதன்,கிருஷ்ணசாமி,சுந்தரம்,நீலகண்டன்,மற்றும் திருவள்ளூர் மாவட்ட வட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி அவர்களின் சென்னை விஜயத்தை சிறப்பான வரவேற்பளித்து  சாதனை படைக்கவேண்டும் என்றும் தீர்மானம் போடப்பட்டது.விழா  ஏற்பாடுகளை நகர செயலாளர் ஜோசப் சாமுவேல் செய்திருந்தார்.

Thursday 14 June, 2012

வட்டி கட்டினால்தான் பணம் கொடுக்க முடியும்












Saturday 2 June, 2012

வைகுண்டம்:
சுடுகாடு, சாவு என்று பேசினாலே மக்கள் விரும்புவதில்லை.பூமியிலேயே என்றும் வாழ்வோம் என்ற  நம்பிக்கை.இறப்பும் பிறப்பும் இயற்கையின் ரகசியம். பிறப்பையாவது ஓரளவு கணிக்கலாம்.இறப்பை யாராலும் கணிக்க இயலாது.இது வரமா, சாபமா?
மூன்று நாள் வெளியூர் சென்றுவிட்ட மாலையில் திரும்பியபோது, எதிர்வீட்டில் ஷாமியானா போட்டிருந்தது.இப்போதெல்லாம் வீட்டில் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும், ஷாமியானா போடுவது தவிர்க்க முடியாத பாஷன்.
எதிரில் வந்தவரை விசாரித்தால் என்னுடைய நண்பருடைய அப்பா (92) இறந்து விட்டதாக சொன்னார்.நண்பரும் என்னைபோல இதய நோயாளி. ஆனால் அவருடைய அப்பா நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்.கால் முட்டி மடக்க முடியாததால் வெளியே வரமாட்டார்.மற்றபடி
உட்கார்ந்தபடி எல்லா வேலைகளையும் செய்துகொள்வார்.
நண்பரை பார்த்துவிட்டு ஆக வேண்டிய வேலைகளை செய்ய முதல் வேலையாக சுடுகாட்டின் பொறுப்பாளருக்கு போன் செய்து விவரத்தை சொன்னேன்.அடுத்த நாள்  4 .00 மணிக்கு நேரம் ஒதுக்கி தந்தார்.(நேரம்!)
பயோ காஸ் முறையில் எரிப்பதால் மிகவும் குறைவான கட்டணம்.Rs.1300 /- மட்டுமே!வாகனமும் அவர்களே அனுப்பி உடலை மயானத்திற்கு எடுத்து செல்லுகிறார்கள்.அதற்கு தனி கட்டணம் கிடையாது.
இடத்தை பார்த்தால் கல்யாண மண்டபம் போல பளீர்! ஆபீஸ் ரூம் ஏ.சி.,தியான மண்டபம் ஏ.சி.,சாதாரண விறகு கட்டைகளை போட்டு பர்னசை எரிய விடுகிறார்கள்.மின்சாரம் தேவையில்லை.
ஒரு மணி நேரத்தில் உடல் சாம்பலாகிவிடுகிறது.
ஒரு தனியார் ட்ரஸ்ட் நடத்தும் இதற்கு வைகுண்டம் என்ற பெயர் பொருத்தமானதே!