Tuesday 29 May, 2012

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அதிமுக தமிழகமெங்கும் போராட்டம்!

 பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அதிமுக தமிழகமெங்கும் இன்று போராட்டம் நடத்தியது. மத்திய மாநில அரசுகள் வரிகளை குறைத்தாலே போதுமானது! கலைஞர்!!!
டெல்லி, கேரளா,உத்திரகான்ட் ஆகிய மாநிலங்களில் செய்தது போல  பெட்ரோலுக்கு விதிக்கப்படும் மதிப்பு கூடுதல் வரியை குறைத்தாலோ,நீக்கிவிட்டாலோ(!), பெட்ரோலின் விலை கணிசமாக குறையும். மத்திய அரசும் மாநில அரசும் இதை செய்யவேண்டும். இந்த கருத்தை எல்லா அரசியல்(வாதிகளும்-தலைவர்களும்)கட்சிகளும் ஏற்று செயல்பட்டால் தீர்வு உண்டு!!செய்வாங்களா? ---பெட்ரோலுக்கு நாயா பேயா அலையும் மக்கள் சார்பாக வாக்காளன். 

Friday 18 May, 2012

வாழ்கபோலிஸ்!!! வாழ்க டெக்னாலஜி!!!


வாழ்கபோலிஸ்!!!   வாழ்க டெக்னாலஜி!!!

போலிஸ் என்றால் படத்திலலேட்டா கடைசில வருவாங்க.
நடைமுறையில போலிசு கிட்ட போகவே சாதாரண மக்களிடம்  
இன்றும் அச்சம் உள்ளது.
இது அந்த மாதிரி அல்ல.
சென்னை கிண்டி நூறடி ரோடில் எம்.எம்.டி.எ. நிறுத்தத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த நடு வயது பெண்மணியிடம் செயினை அறுத்துக்கொண்டு 
ஒரு "பைக்"காரன் வேகமாக சென்றுவிட்டான். 
அந்த பெண்மணி நாடு ரோட்டில் "ஐயோ, என் புருஷன் கொன்று விடுவானே"என்று பெருங்குரலில் அழ, யாரோ ஒரு புண்ணியவான் 
போலிசுக்கு போன் பண்ண 'சர்'ரென ஜீப்பில் வந்த உதவி 
கமிஷனர்,விசாரணையில் இறங்கினார்.
பிறகு, லேப்டாப்பில் தட்டி, கண்காணிப்பு கேமராவில் 
திருடனின் வண்டி நெம்பரை கண்டுபிடித்து 
ஆளை பிடிக்க வைத்து விட்டார்.
அந்த பெண்மணியிடம் ஸ்டேஷனில் வந்து 
செயினை வாங்கிகொள்ளும்படி சொன்னார்.


வாழ்கபோலிஸ்!!!   வாழ்க டெக்னாலஜி!!!! நம்ப முடியுதா? 

Friday 4 May, 2012

அம்மணியும் அணிலும்

அம்மணியும் அணிலும் :
காலையில் குயிலின் குரலை கேட்டு கண்விழிப்போம்.எதிரில் மிகப்பெரிய காலி மனையில், ஏராளமான மரங்கள்.விதவிதமான பறவைகள்.மாலையில் திரும்பி வந்து கூடுகளில் அடையும் இரைச்சல் இனிமை.பலவித குரல்கள்.கூடவே குஞ்சுகளின் கொஞ்சல்கள்!!!! 
நடு இரவில் ஆந்தையின் அட்டகாசம். 
பகலில் கிளியின் குரல்கள் அவைகளை 
தேடவைக்கும்.
அணில்கள் துள்ளி விளையாடுவதே அழகோ அழகு. குயில்கள்  அவ்வளவு எளிதாக கண்ணில் படாது. இதெல்லாம் எங்கோகிராமத்தில் இல்லைங்க.
சென்னையின் மத்தியில்.
இதெல்லாம் போன வருடம்..அந்த காலி மனையை சேட்டு, வீட்டு மனைகளாக்கி விற்றுவிட்டதால், அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டிகொண்டிருக்கும்போது, சில மரங்களையாவது விட்டு வைக்க சொன்னோம்.
ம்ஹும்..
வாங்கியவன் அரசியல்வாதி.ஒரு பிட் இடம் கூட விடாமல் படம் போட்டு விற்று விட்டான். அந்த மரங்களில் இருந்த பறவை கள், அணில்கள் தவித்த தவிப்பு இருக்கிறதே, கொடுமை. அணில் குஞ்சுகள் சிலவற்றை எடுத்து வந்து வளர்த்தோம்.
அம்மணிக்கு இதெல்லாம் அலர்ஜி. ஜன்னலில் வைக்கும் உணவை காகமும், அணிலும் போட்டி போட்டு உண்ணும். ஒரு சமயம் நான் வெளியூர் போயிருந்தபோது, அம்மணி சரியாக ஜன்னலில் உணவு வைக்கவில்லை. அது சமையல் அறைக்குள்ளேயே வர ஆரம்பித்து விட்டது.
அம்மணி போட்ட கூச்சலில் (என்னைத்தான்) வலை போட்டுவிட்டேன் .உணவு வைப்பது தொடர்கிறது. 

Thursday 3 May, 2012

சென்னை மாநகராட்சி 7-வது மண்டலகூட்டங்கள்


சென்னை மாநகராட்சி அதிமுக கையில், ஆனால் 7-வது மண்டலமாகிய, அம்பத்தூர் மண்டல தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது, திமுக.
எப்படி?? அதிமுக நண்பர்கள் போட்ட ஓட்டுக்கள்தான். 
இது பழைய கதை!
இப்போ என்னா அதுக்கு? 
மண்டல கூட்டங்கள் நடந்தால் தான் அந்தந்த வார்டு பிரச்சினைகளை பேசி திட்டங்கள் போட்டு, தீர்மானங்கள் இயற்றி மாநராட்சி கூட்டத்தில் வைத்து நிதி ஒதுக்க முடியும். 
 
மண்டலக்கூட்டங்கள் நடக்கலியா? 
அதிமுக 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதால், கூட்டம் நடத்த முடியவில்லை.
கவுன்சிலர்களை கூட்டத்தில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்த முடியாதாம்.
அப்புறம் எப்புடி ரோடு போடுவாங்க? குப்பை அகற்றுவாங்க?
எங்களுக்கு ஏன்தான் இப்படியெல்லாம் நடக்குதோ?

Tuesday 1 May, 2012

ஈழ தமிழர்களை பற்றி -டி.ஆர்.பாலு


ஈழ தமிழர்களை பற்றி பேச எங்களுக்கு மட்டுமே அதிக உரிமை உள்ளது.நான் சென்னை கழக மாவட்ட செயலாளராக இருந்த 13 ஆண்டுகளில் நடத்திய  90% பொதுக்கூட்டங்கள்,ஆர்பாட்டங்கள் ஸ்ரீலங்கா தமிழ் பிரச்சினை பற்றியதே!!! டெசோ ஆரம்பித்தது மட்டுமல்ல அதில் மதுரையில் நடந்த கூட்டத்தில் வி.பி.சிங், வாஜ்பாய் போன்றவர்களை பங்கு பெற செய்து ஈழ போராளிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட காரணமாகவும், இருந்தது கலைஞர் தலைமயில் உள்ள திமுகழகமே.
பதவியில் இருந்த போது ஒன்றும் செய்யவில்லை என்று விமர்சனம் செய்பவர்களுக்கு சொல்லுகிறேன்!எல்லா விஷயங்களிலும் வெளிப்படையாக சொல்லவோ செய்யவோ முடியாது.இந்தியாவில்,உலகெல்லாம் வாழும் தமிழர்களின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு தான் எந்த நடவடிக்கையையும் எடுக்கமுடியும்.அண்டை நாடான பாகிஸ்தான் எதிரி,பங்களாதேஷ், சீனா என்று எதிரி பட்டியல் இருக்கும்போது, தெற்கில் ஸ்ரீலங்காவையும் பகைக்க முடியாது. சீனா ஸ்ரீலங்காவில் ஆயிரம் மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து கொடுத்திருக்கிறது. ஒரு லட்சம் சீன படையினர் சீருடை இல்லாமல் அங்கே பணிபுரிகிறார்கள். இந்தியாவின்  பங்களிப்பு அங்கே தேவைப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லாவற்றையும் போது மேடையில் சொல்ல முடியாது.இதே ஜெயலலிதா பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு 
கொண்டு வரவேண்டும் என்று சொன்னார்."
அம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்,டி.ஆர்.பாலு ஆவேசம்.