Wednesday 21 November, 2012

ambatturum ---developmentum...

 உள்ளாட்சி தேர்தலின் போதே அம்பத்தூர் ராம் நகர் ஏரியாவில் தார் ரோடு போட்டுக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு மெட்ரோ,drainage என்று ரோடுகளை தோண்டியதில், அம்பத்தூர் என்றாலே ஆட்டோ,கால் டாக்சி காரர்கள் வர தயங்கினார்கள்.வந்தாலும் உள் ரோடுகளுக்கு வர மறுத்தார்கள்.சொந்த வண்டிக்காரர்கள் எல்லாம் ட்ராக்டரில்  பயணிப்பதை போல குதித்து குதித்து பயணம் செய்து எலும்புகள் இடம் மாறியதும்,ஆங்காங்கே சதை பிடிப்பால் அவதியுடன் டாக்டரிடம் ஓடியதும், வண்டிகளுக்காக செலவு செய்ததும் தனி கதை.
பஸ் ஓடும் பாதைகள் புதிதாக போட ஆரம்பித்ததும், ரோடை  ஓரடி ஆழத்திற்கு நோண்டி எடுத்து பிறகு சரளை கல் மண் போட்டு அதன் மேல் தார் ரோடு grid road போட்டதால் வீடுகள் தாழ்வான நிலைக்கு செல்லுவது தவிர்க்க பட்டுள்ளது.

Tuesday 20 November, 2012

talk show:

டாக் ஷோ ::::
விசுவின் அரட்டை அரங்கம் மற்ற டி.வி.சீரியல்களில் இருந்து வித்தியாசமா இருந்ததால் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. அவரை தொடர்ந்து பலரும் பல சேனல்களில் டால்க் ஷோ நடத்துகிறார்கள்.
எல்லோருமே சினிமா பிரபலங்கள்.
ஆனால் விஜய் டி .வி.யில் "நீயா நானா" நிகழ்ச்சிய நடத்தும் கோபிநாத் 
இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்....
நிகழ்ச்சியும் பிரபலமானது.
அதற்கு காரணம் இயக்குனரின் தலைப்பு தேர்வும், 
அதை கோபிநாத் மூலமாக வெளிக்கொணரும் சாமர்த்தியமும்தான்!
இன்றைய இளைய சமுதாயம், திருமணம், புது மனை புகுவிழா போன்ற உறவினர்களின் நிகழசிகளுக்கு வருவதற்கு,கலந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.
இதை தலைப்பாக வைத்து பெரியவர்களையும், இளைஞர்களையும் பேச வைத்து எல்லோரையும் நெகிழ வைத்துவிட்டார்கள், என்று நண்பர் ஒருவர் தன்னுடைய 'ப்ளாக்கில்' எழுதியது முற்றிலும் உண்மை.

Sunday 28 October, 2012


அம்பத்தூரில் மோசமான சாலைகள், வாரப்படாத குப்பைகள், மண்டல கூட்டங்களுக்கு வராத உறுப்பினர்கள்,செ யல்படாத மாநகராட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது.மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம்,முன்னாள் எம்.எல் ஏ.ப.ரங்கநாதன், 7-வது மண்டல தலைவர்-நகர கழக செயலாளர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் ஆர்பாட்டத்தில் பங்கு பெற்றனர்.

Sunday 7 October, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: தங்கள் தலைவரின் கட்டளைப்படி தமிழகமெங்கும் அதிமுகவி...

enna nadakkuthu என்ன நடக்குது: தங்கள் தலைவரின் கட்டளைப்படி தமிழகமெங்கும் அதிமுகவி...: தங்கள் தலைவரின் கட்டளைப்படி தமிழகமெங்கும் அதிமுகவின் ஆட்சியின் குறைகளை பிட் நோடிஸ் களாக வீடு வீடாக தெரு தெருவாக ஊர் ஊராக திமுக தொண்டர்கள், ...
தங்கள் தலைவரின் கட்டளைப்படி தமிழகமெங்கும் அதிமுகவின் ஆட்சியின் குறைகளை பிட் நோடிஸ் களாக வீடு வீடாக தெரு தெருவாக ஊர் ஊராக திமுக தொண்டர்கள், விநியோகித்து வருகிறார்கள்.

அம்பத்தூரில் திருவள்ளூர் மாவட்ட திமுகழக பொறுப்பாளர்-சுதர்சனம்,சென்னை மாநகராட்சியின் 7-வது மண்டல தலைவரும்,அம்பத்தூர் நகர திமுகழக செயலாருமான ஜோசப் சாமுவேல் திரளான தொண்டர்களுடன் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்கள். 



Friday 5 October, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: செருப்ப தலைமாட்டில் வைத்து

enna nadakkuthu என்ன நடக்குது: செருப்ப தலைமாட்டில் வைத்து: வெளியூருக்கு செல்ல வேண்டுமென்றால், எனக்கு இனிப்பு சாப்பிடுவது போல.சிறிய வயதிலேயே வெளியூர்களுக்கு செல்ல ஆரம்பித்ததால் பயம் என்பதோ எங்கு தங்...

செருப்ப தலைமாட்டில் வைத்து

கிங்பிஷர் நிறுவனத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் வங்கிகள் நிதியுதவி: ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?
வெளியூருக்கு செல்ல வேண்டுமென்றால், எனக்கு இனிப்பு சாப்பிடுவது போல.சிறிய வயதிலேயே வெளியூர்களுக்கு செல்ல ஆரம்பித்ததால் பயம் என்பதோ எங்கு தங்குவது என்ன சாப்பிடுவது என்ற பயமோ யோசனையோ கிடையாது.எங்கு என்ன சாப்பிட கிடைக்கிறதோ சாப்பிட்டு விடுவேன். இது பிடிக்கும் இது பிடிக்காது என்றெல்லாம் வரை முறை எல்லாம் கிடையாது. மாமா வீடு,தாத்தா ஊரு என்று தனியாக செல்ல ஆரம்பித்த பழக்கம் வேலையில் சேரும்போது பயனுள்ளதாக இருந்தது. சேல்ஸ் டாக்ஸ் கணக்கு முடிக்க, ஆர்டர் எடுக்க, வசூல் செய்ய என்று எல்லாவற்றிற்கும் என்னை அலுவலகம் முழுமையாக பயன்படுத்தியது. பல பேசும் மொழிகளை கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது மட்டுமல்லாமல் எந்த இடத்தில் என்ன கிடைக்கும்/கிடைக்காது என்பது தெரிந்தது.
வெளியூர்களுக்கு செல்லும்போது இயற்கை காட்சிகளை படம் பிடிக்கும் பழக்கம் ஒட்டிக் கொண்டது. அந்த படங்களுக்கு குறிப்புகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவேன்!!!அதன் மூலம் பெரிய அளவில் காசு கிடைக்கவில்லை என்றாலும் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.வெளியூர்களிலும்,பயணத்திலும் என்று  நண்பர்கள் வட்டம் பெரிதானது.கான்பூர் சென்றபோது முகம் பார்க்கும் கண்ணாடி போல உள்ள ஷூ வாங்கினேன். அந்த காசுக்கு 6 ஷூக்கள் வாங்கியிருக்கலாம். பயணத்தின்போது பெட்டியை நடுவில் வைத்து தூங்குவேன்.
ஆபீஸ் வேலையா எர்ணாகுளம் செல்ல கொச்சி எக்ஸ்ப்ரஸில் பயணம்.நன்றாக தூங்கிவிட்டேன்.வண்டி ஒரு இடத்தில் வெகு நேரமாக நின்றதால்,கீழே இருந்த ஒருவரிடம், இது எந்த இடம் என்றதற்கு, "ஹார்பர்" என்றார். கையில் செய்தி தாளில் எதையோ சுருட்டி எடுத்து சென்றார். அதுதான் கடைசி ஸ்டேஷன்  என்பதால் இறங்கி பெட்டியை எடுத்துகொண்டு இறங்கினேன். ஷூவை எடுக்க கீழே குனிந்து தேடினேன்.காணவில்லை.ஷூவை யார் எடுக்கப்போகிறார்கள் என்று கீழே  போட்டிருந்தேன். அது விலை உயர்ந்தது என தெரிந்தவன் எடுத்து சென்றுவிட்டான், அரை விலைக்கோ கால் விலைக்கோ வித்துவிட...சுரீல் என நினைவுக்கு வந்தது. "ஹார்பர்" என்று சொன்னானே அவன்தான்!!!  
பேன்ட கழட்டி வைத்துவிட்டு வேட்டிய கட்டிக்கிட்டு வெறும் காலுடன் ஸ்டேசன விட்டு வெளியில் வந்தேன்.
இப்போல்லாம் செருப்ப தலைமாட்டில் வைத்து தான் தூங்குவேன்,பயணத்தின் போது ......

Monday 24 September, 2012

ஷீரடி சாய் பாபா கோவில்


                                                                                   

ஷிர்டி :

ஷீரடி சாய் பாபா கோவில் சென்னையில் மயிலாப்பூரில் ஒன்றும் கிண்டியில் மெயின் ரோடிலேயும் உள்ளது....முதன்முதலில் சென்னைக்கு அப்பாவுடன் வந்த போது, சென்றது நினைவுள்ளது.
கோவையில் மேட்டுப்பாளையம் ரோடில் அமைந்துள்ளது.
சென்ற டிசம்பர் மாதம் மும்பை சென்றிருந்தபோது, ஷீரடி செல்லலாம் என்று பேச்செடுத்தபோது, இரண்டு விதமாக பயமுறுத்தினார்கள். 
1. ஏழு மணி நேர பஸ்  பயணம், மும்பையிலிருந்து.
2. ஷீரடியில் பக்தர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு அதிகம்.....உங்களால் சமாளிக்க முடியாது.அதனால் போகாமலே திரும்ப வேண்டியதாயிற்று.
இன்னொன்றும் சொன்னார்கள். திருப்பதிக்கு எப்படி அந்த சாமி நினைத்தால்தான் 
போகமுடியுமோ, அதே போல ஷிர்டி சாய் பாபா நினைத்தால்தான் ஷிர்டி செல்லமுடியும் என்றார்கள்.
இந்த தடவை சொன்னதும்,மகள், ஆன் லைனில் (போக, வர) டிக்கட் புக் பண்ணிவிட்டார்.

காலை 7.15 க்கு கிளம்பிய பஸ் இரண்டு இடங்களில் நிறுத்தப்பட்டது. இட்லி,வடை, ரவாதோசை,மசால் தோசை என்று தென்னிந்திய,தமிழக உணவுகள் கிடைத்தது ,ஆச்சர்யம். மூன்றரை மணிக்கு ஷிர்டி போய் சேர்ந்தோம். கோவிலுக்கே எதிரிலேயே (துளசி பார்க்) ஓட்டலில் ஒய்வு எடுத்துவிட்டு, 4 மணிக்கு தரிசனத்திற்கு சென்றோம்.அதிக கூட்டம் இல்லாததால் அரை மணிக்குள்,தரிசனம் செய்ய முடிந்தது.தள்ளு முள்ளும் இல்லை. ஆந்திரா வகை உணவு கிடைத்தது. நண்பர்களுக்கு பிரசாதமும்   சாய்பாபா உருவ பொம்மைகளும் வாங்கிக்கொண்டேன். சிறிது நேர ஓய்விற்கு பிறகு, 7.30 மணிக்கு கிளம்பிய பஸ் விடியலில் (3.30) மும்பை கொண்டு வந்து சேர்த்தது. வால்வோ ஏ ஸி பஸ்.
இதில் என்ன விசேஷம் என்றால் மயிலாப்பூர் சாய் பாபா கோவிலுக்கு அழைத்து சென்றது,
 அப்பா. 
ஷிர்டி சாய் பாபா கோயிலுக்கு அழைத்து சென்றது 
மகள் .

Friday 21 September, 2012

flight No.6E-279..தொடர்ச்சி ....



தொடர்ச்சி ....
ஓடு பாதையிலேயே நல்ல உயரத்திற்கு சென்ற விமானம், இடது இறக்கையை  கீழிறக்கி சர்ரென்று திரும்பியது..கீழே தண்ணீர், சற்று நேரத்தில் கடலுக்கு மேலே. பத்து நிமிடத்தில் வெண் மேக கூட்டத்திற்கு மேலே, இன்னும் மேலே.......இனி வேடிக்கை பார்க்க ஒன்றுமில்லை..கீழே மேக கூட்டம் .தொலைவில் நீல நிறத்தில் வானமா, கடலா? 
பெல்டை விடுவித்துவிட்டு ரெஸ்ட் ரூம் போக ஒரு கூட்டம் அலை மோதியது. 
அது அடங்கியதும், தள்ளு வண்டியில் காபி, மினி தோசை, என்று வந்ததை வேண்டியவர்கள்  வாங்கி உள்ளே தள்ள ஆரம்பித்தார்கள்.
இந்த உணவெல்லாம் நமக்கு ஒத்து வராது..எடுத்து வந்தால் சாப்பிட அனுமதிப்பார்களோ,மாட்டார்களோ என்ற சந்தேகத்தில் 
உணவு எதுவும் எடுத்து வராததால் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.
 "விமானியின் அறிவிப்பில்,பறந்து கொண்டிருப்பது 10 ஆயிரம் மீட்டர்(33,000-அடி)உயரத்தில்,விமானத்தின் வேகம் மணிக்கு-800 கிலோமீடர் என்பதும்,வானிலை சாதாரணமாக இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது. 
திருப்பதிமலையையும் அடுத்து, நீர்த்தேக்கத்தை பார்க்கவும்,சீட் பெல்டை போட்டுகொள்ளவும், எலக்ட்ரானிக் சாதனங்களை அணைக்க சொல்லி அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது.
புழல் ஏரியை நெருங்கும்போது மிக கீழே பறக்க ஆரம்பித்த விமானம் திருவொற்றியூர் தாண்டி, கடலில் வெகு தூரம் சென்று வலது பக்கம் திரும்பி, திருவல்லிக்கேணி மயிலை (பறக்கும் ரயில்-மிக அழகாக)வழியாக அடையார் பிரிட்ஜ்,கிண்டி பாலம், கத்தி பாரா, ராணுவ இடத்தின் பசுமையான பகுதியை தாண்டி, இன்னும் கீழே, கீழே, "தட்"டென்று ஓடுபாதையில் டயர்களை இறக்கி இறக்கையின் மேல்பகுதி முழுவதுமாக திறக்கப்பட்டது.
ஒவ்வொரு இஞ்சினாக அணைத்து, வேகத்தை குறைத்து........ஓடு பாதையில் ஓடி சரியாக நிறுத்த வேண்டிய 
இடத்தில் நின்றது. 
இறங்குவதற்கு அவசரப்படும் கூட்டத்தில் முட்டி மோதாமல், அமைதியாக அமர்ந்திருந்தேன்.கார்கோ வண்டி வந்து, கீழே கதவு திறக்கப்பட்டு பெட்டிகள் அதில் ஏற்றப்படுவதை பார்த்தேன்.என் பெட்டி ஏற்றப்பட்டதை பார்த்து விட்டு எழுந்தேன்.
வெளியே வால்வோ பஸ்ஸில் மக்களுடன் கலந்து "காமராஜர் உள்நாட்டு விமான" நிலையத்தினுள் நுழைந்தேன்.
அரை மணி நேரம் காத்திருந்ததில் கன்வேயரில் பெட்டி வந்தது.எடுத்து நாய் குட்டியை இழுத்து வருவது போல் இழுத்து கொண்டு வெளியில் வந்தேன்.
கால் டாக்சிகாரன் அம்பத்தூருக்கு 750 ரூபா, பிக்ஸ்டு ரேட் என்றதும் "சரி" என்று 
ஏறி அமர்ந்தேன். வீட்டிலிருந்து போன்....."சென்னை வந்துட்டேன்,சமைச்சு வை,கொலை பசி".என்றேன்.

enna nadakkuthu என்ன நடக்குது: FLIGHT No.6E-279

enna nadakkuthu என்ன நடக்குது: FLIGHT No.6E-279:        கடைசி நிமிடத்தில் ரயிலில் ஏறும் பழக்கத்தை என் மனைவி மக்கள் கேலி செய்வார்கள்.அதனால் விமானப்பயணத்திற்கு, என்னை சென்னையிலிருந்து மகளும...

FLIGHT No.6E-279

1170351    1170508 1170580
கடைசி நிமிடத்தில் ரயிலில் ஏறும் பழக்கத்தை என் மனைவி மக்கள் கேலி செய்வார்கள்.அதனால் விமானப்பயணத்திற்கு, என்னை சென்னையிலிருந்து மகளும், மும்பையிலிருந்து மற்றொரு மகளும் ஜெய்ப்பூரில் இருந்து மருமகனும் மானீட்டர் பண்ணிக்கொண்டே இருந்தார்கள். பயணத்தின் போது 
இடையூறாக இருக்கக்கூடாதென தண்ணீர்,காப்பி, குடிப்பதையும் தவிர்த்தேன்!!திட உணவின் அளவை குறைத்தே சாப்பிட்டேன்!!!  ஆனால் அதிக அளவு தண்ணீர் குடிக்கவேண்டும் என்றது விமான டிக்கட்டின் வாசகம்.மிதமான தூக்கத்தையும்,உணவையும் 
வலியு றுத்தியது.
ஊட்டி,கொடைக்கானல் போன்ற உயரமான இடங்களுக்கு பயணம் செய்யும்போது சிலர் வாந்தி எடுப்பதை கண்டதில் இருந்து, நான் வெறும் வயிற்றுடன் அல்லது ஜூஸ்,காபி போன்றவைகளோடு நிறுத்தி கொள்ளுவேன்.
பயணத்தில் சீனியர் சிடிசனுக்கு சலுகைகள் உண்டு. கவுண்டரில் இருந்த பெண், சீட் விருப்பத்தை கேட்டபோது, "ஜன்னல் அருகில் இறக்கைக்கு 
பின்னால்(கிட்டத்தட்ட) வால் பகுதிக்கு முன் என்றேன்."
மொத்தம் 30 வரிசைகள் கொண்டது, ஒவ்வொவொரு வரிசையிலும் 6 சீட்டுகள்.
ஒவ்வொறு வரிசைகளிலும் A - மற்றும் F , ஜன்னல் சீட்டுகளாகும். எனக்கு விமானத்தின் வலது இறக்கையின் பின்னால் உள்ள ஜன்னல் சீட்(26-F) ஒதுக்கினார்,அந்த பெண்மணி.(வாழ்க).
எத்தனை தடவை பயணம் செய்தாலும் வெளியில் வேடிக்கை பார்ப்பது ஒரு தனி சுகம்.
லக்கேஜ்களை ஏற்றி ஒரு சிறிய வண்டி நேர் கீழே நின்றது.விமானத்தின் சிறிய கதவு திறக்கப்பட்டு கன்வேயர் பொருத்தி,இயக்கியதும் ஒவ்வொருத்தரின் பெட்டியும் உள்ளே சென்றது.நிறத்தை வைத்து என் பெட்டி ஏற்றப்பட்டதை பார்க்க முடிந்தது.
("அதிக வெயிட் தூக்காதே.பேக்கேஜில்  போடு."
  "இறங்கும் இடத்தில் நேரம் ஆகுமே".
."இப்போல்லாம் 15 நிமிடத்தில் வந்து விடுமப்பா"
"சரி")
கார்கோ டோரை மூடியதும் சிறிய டிராக்டர் அந்த கார்கோ வேனை இழுத்து சென்றது.
ஒரு ஏர்- ஹோஸ்டஸ் அபாய சமயங்களில் எப்படி செயல பட வேண்டும் என்பதை செய்து காட்டினார்.சீட் பெல்டை போடுவது,கழற்றுவது,ஆக்சிஜன் கருவியை எப்படி பொருத்தி கொள்ளுவது? லைப் ஜாக்கட்டை அணிந்து கொள்ளுவது பற்றி இந்தி,ஆங்கிலத்தில் விளக்கப்பட்டது.சீட் பெல்ட் போட சொன்னார்கள்.முடியாதவர்களுக்கு ஏர் ஹோஸ்டஸ் உதவினார்கள். கேப்டனின் அறிமுக விளக்கத்துடன் விமானம் புறப்பட தயாரானது. இரண்டு இறக்கைகளையும் மூடி திறந்து செயல்படுகிறதா என்று செக் செய்வதை பார்க்க முடிந்தது. தரை என்ஜினீயர் கட்டை விரலை உயர்த்தி காட்ட, இஞ்சின் இயக்கப்பட்டு நகர ஆரம்பித்தது.
இது  டாக்சியிங்.
சாதாரண வாகனம் போல ஓடு பாதையில் ஓ..................டி  திரும்பி நின்றது. 
அடுத்த கட்டம் எல்லா இஞ்சின்களையும் இயக்கி முழு வேகத்தில் மேலே எழும்ப வேண்டும்.. ஏன் நின்று கொண்டிருக்கிறது...  
சத்தத்துடன் ஒரு விமானம் 
சற்று தூரத்தில் தாழ பறந்து, தூரத்தில் டயர்களை தேய்த்து,புகையுடன் ஓட்டத்தை சிறிது சிறிதாக குறைத்து நின்றது...அது போல ஐந்து விமானங்கள் தொடர்ச்சியாக இறங்கின...கண்கொள்ளா காட்சி.
டவரிலிருந்து இந்த விமானம் பறக்க அனுமதி வந்ததும், அனைத்து இன்ஜின்களும் இயப்பட்டன. வேகம் எடுத்து ஓட ஆரம்பித்தது. இப்போது 
இறக்கையில் உள்ள கதவுகள் பாதி திறக்கப்பட்டதை பார்க்க முடிந்தது.முன்பக்கம் உயர்ந்து,  சர்ரென சீறி மேலெழும்புவதை உணர முடிந்தது.
உயர.
  உயர 
      உயர கீழே கட்டிடங்கள் சிறியதாக, ஓடைகள் கால்வாய்களாக வீடுகள் பொம்மை வீடுகளாக....அற்புதமான காட்சி. 

Tuesday 18 September, 2012

நடு வானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது,

A security personnel stands guard as the Air India's Dreamliner Boeing 787 taxies upon its arrival at the airport in New Delhi காலையில் எழுந்தவுடனே.மகள்,
"அப்பா இப்பவே கொஞ்சம் டிபன் சாப்பிடறியா?"
" பயணத்திற்கு ஒரு மணி நேரம் முன் சாப்பிடறேம்மா!!"

வந்து 15 நாட்கள் ஆகிவிட்டது. மகளுடன் இருந்த நாட்கள் இனிமையானவை. இன்று சென்னைக்கு பயணம்.
உள்நாட்டு பயணமானாலும், ஏர் போர்டில் பண்ணும் அலம்பல் கொஞ்சம் ஓவர்.
ஒரு மணி நேரம் முன்னதாகவே செக்-இன். கொஞ்சம் லேட்டா போனாலும் கதவை  மூடி விடுகிறார்கள்.
ட்ராலியை தள்ளி வந்த மருமகன், இயக்கி காட்டினர்.பெட்டியை தூக்கி அதில் வைத்தார். உள்ளே செல்ல ஆரம்பித்தேன்.பெட்டியை கன்வேயரில் வைத்து டிக்கட்டை கொடுத்தேன்.tag-களை போட்டதும், பத்தாம் நம்பர் கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
இரண்டு இடங்களில் மெடல் டிடக்டர்,பொருள்களுக்கு ஸ்கான் என்று பயமுறுத்தினார்கள்."கீ,கீ" என கத்தியது,ட்டிடக்டர்.பாக்கட்டில் இருந்த சில்லறை,சாவி ஆகியவைகளை எடுத்து டேபிளில் வைத்ததும்,கத்தலை நிறுத்தியது.
 உடன் நடுத்தர வயதில்,ஒருவர்,"சென்னைக்கா?" என்றார்.
சாதா ரணமாக அறிமுகம் இல்லாதவர்களுடன் யாரும் பேசாத இடம் அது. தயக்கமாக "ஆமாம் " என்றேன்!
"நான் முதல்முறையாக விமானத்தில் செல்கிறேன்!" என்றார்!
"விமானத்தில் அமரும்வரை உங்களுடனேயே இருக்கட்டுமா?"
"சரி"
அறிவிப்பு வந்ததும், நடக்க ஆரம்பித்தோம்
.நீ.......ளமான காரிடாரில் நடந்து திரும்பி ந..........டந்து மூடிய வளைவுக்குள் நுழைந்தோம்.
ஏகப்பட்ட மேக்-அப்புடன் ஒரு  பெண்மணி, டிக்கட்டை வாங்கி சீட் நம்பரை பார்த்து உட்கார வைத்தார்.
"சார் இது பஸ்  தானே!"
" ஆமாம், ஏன் கேட்கிறீர்கள் "
மகன் சொன்னான், "பஸ்சில  போய் ஏணியில ஏறி விமானத்தில் உள்ளே செல்லணும்"னு, அதான் கேட்டேன் "
"இன்னிக்கு அப்படியில்ல, நேரடியா விமானத்தில ஏறிட்டோம்"
 "அப்போ பஸ்- னீங்களே"
இது ஏர்-பஸ்"
"அப்போ நாம்ப பிளேன பாக்க முடியாதா?"
" இப்போ முடியாது இறங்கும்போது பார்க்கலாம்"
" மற்ற விமானங்களை ஜன்னல் வழியாக பாக்கலாம்."

(விமானத்தில் ஏறும்போது கையை காட்டி மகனிடம் விடை பெறலாம் என்று  நினைத்தவர் ஏமாற்றம் அடைந்ததை முகம் காட்டியது.)

அங்கிருந்து வழி அனுப்புபவர்களை பார்க்க முடியாது, என்று விளக்கினேன்.

சென்னை அடையும் வரை அவர் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு வந்தேன்.

அவர் கேட்ட கேள்விகளுள் ஒன்று::.
நடு வானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது,
"இப்போ இஞ்சின் வேலை செய்யலன்னா என்ன ஆகும்?"







Shayad Mere Shaadi Ka Khayal - Tina Munim - Rajesh Khanna - Souten - Old...

Chalte Chalte Mere Ye Geet Yaad Rakna,

Wednesday 12 September, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: கோவையில் இருந்தபோது (1978-1994) வார விடுமுறையில் ம...

enna nadakkuthu என்ன நடக்குது: கோவையில் இருந்தபோது (1978-1994) வார விடுமுறையில் ம...: கோவையில் இருந்தபோது (1978-1994) வார விடுமுறையில் முதல் இரண்டு வாரங்கள், கொடைக்கானல்,ஊட்டி,அடுத்த இரண்டு வாரங்கள் மருதமலை என்று ஜாலியாக நண்ப...
 

கோவையில் இருந்தபோது (1978-1994) வார விடுமுறையில் முதல் இரண்டு வாரங்கள், கொடைக்கானல்,ஊட்டி,அடுத்த இரண்டு வாரங்கள் மருதமலை என்று ஜாலியாக நண்பர்களுடன் செல்லுவேன்.ஆனால் ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய பொறுமை இல்லை.பஸ்ஸில்,காரில் போவதை விட இரண்டு
 மடங்கு நேரம் ஆகும் என்பதால் மட்டுமல்ல,டூரிஸ்ட் ,குழந்தைகள்,புதிதாக மணமானவர்கள் என்று ஒரு தினுசான கூட்டம்... நமக்கு ஒத்து வராது..சொந்த 
வண்டியில் போகும்போது மரத்தில் காய்த்து தொங்கும் பலா,பழங்கள்,பறிப்பது, கலாட்டா செய்து கொண்டு போவது என்று அது ஒரு தனி கோஷ்டி..ஒரு முறை,மகளுக்கு சிறிய வயதானதால், மலை ரயிலில் அழைத்து சென்றேன்!!ரயில்,குகைக்குள் (இருட்டில்)நுழைந்து செல்லும்போது,குழந்தைகள்"ஓ"வென கூச்சலிடுவதும், தேனிலவு ஜோடிகள், டூரிஸ்டுகள் (ஜோடிகள்தான்) கட்டியணைத்துக்கொள்ளுவதும், ரயில் குகையை விட்டு வெளிச்சத்திற்கு வந்ததும், மறுபடியும்,"ஓ"வென கூச்சல்.வித்தியாசமான அனுபவம். என்னை விட என் மகள் மிகவும் ரசித்தாள் .  மலை ரயில் மிகவும் மெதுவாக செல்லும், இரங்கி கூடவே நடந்து சென்று மறுபடியும் ஏறிக்கொள்ளலாம்.
யானைகள்,நீர் குடிப்பதை பார்க்கலாம்,சில நேரங்களில்....அது மட்டுமல்ல ஊட்டி நகரம் முழுமையாக சுற்றி வருகிறது இந்த மலை இரயில்.
2012.
இப்போது,மும்பையில் வந்த வேலை முடிந்தது. இங்குள்ள மக்கள் மழைக்காக எந்த வேலையையும் நிறுத்துவதில்லை. சரி பூனா வரை சென்று வரலாம் என்று கிளம்பினேன்.
மும்பையிலிருந்து மூன்று மணி நேர பயணம். மலையும் மலை சார்ந்த இடம்.இயற்கை எழில் கொஞ்சுகிறது.
மலையை குடைந்து ரயில் பாதை அமைந்துள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல டன்னல்கள். பத்திற்கு மேல் இருக்கும். அதுவும் "லோனா-வாலா " என்ற இடத்தில் ரயில்
செல்லும்போது அழகாக ஏறி இறங்குகிறது, கொள்ளை அழகு..இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்றும் மழையும்,சூப்பர். மலையும்
சூப்பர்...மின்சார ரயிலில், நின்று கொண்டிருந்தால், பின்னாடி நிற்பவர், முண்டியடித்துக்கொண்டு சீட் பிடிப்பது இல்லை. தனக்கு முன்னதாக வந்தவரை அழைத்து அமர வைக்கும் பண்பு வியக்கவைக்கிறது. அடுத்த இடம் காலியாகும் போது  வந்த வரிசைப்படி அடுத்தவர் அமர்கிறார்.
ஆட்டோ, கால் டாக்சி ஓ ட்டுனர்கள்,மீட்டர்படி காசு வாங்கிகொள்ளுகிறார்கள்.

மீதி தரவேண்டியிருந்தால் சரியான சில்லறை தருகிறார்கள். டிப்ஸ்
வாங்குவதை தவிர்க்கிறார்கள். சென்னைய விட பல விதங்களில் எல்லாம் மலிவே! தென்னிந்திய உணவுதான் விலை அதிகம்.இரண்டு இட்லி இருவது ரூபா.பாவ பாஜி --எட்டு ரூபா..அதே ரொட்டி சப்ஜி சாப்பிட்டால் பதினைந்து ரூபாயில் முடித்து விடலாம்.
மின்சார ரயில்தான் மிகவும் வசதி, வேகமான வாகனம்.சார்ஜும் கம்மி....மெதுவாக,வேகமாக என்று இரண்டு விதமான டிராக்குகளில் வேண்டியதை தேர்ந்தெடுக்கலாம்.ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் கிளீனரின் சம்பளம் மூவாயிரம்..கேட்டதும் வேதனையாயிருந்தது.
மும்பையின் வெஸ்டில் ஏழை,நடுத்தர மக்களும்,ஈஸ்டில்,பணக்காரர்களும்,பெரும் பணக்காரர்களும் இருப்பதாக சொல்லுகிறார்கள்.
 தொடர் மழையால்,மும்பை வெறுத்து போய்விட்டது.சென்னை வெயிலுக்கு மனம் ஏங்க  ஆரம்பித்து விட்டது,கேசவன்  கடை டீயிற்கும்தான்.



 

Tuesday 11 September, 2012

thanks to:::Svaradharaj Sriram

really worth reading this article as we use a lot of mobile phones these days... cid:1.3205252287@web94712.mail.in2.yahoo.com

cid:2.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:3.3205252288@web94712.mail.in2.yahoo.com
...



cid:4.3205252288@web94712.mail.in2.yahoo.com


cid:5.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:6.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:7.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:8.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:9.3205252288@web94712.mail.in2.yahoo.com


cid:10.3205252288@web94712.mail.in2.yahoo.com


cid:11.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:12.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:13.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:14.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:15.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:16.3205252288@web94712.mail.in2.yahoo.com
See More





Sunday 9 September, 2012

லக்பினா என்ற, இலங்கையிலிருந்து வெளியிடப்படுகிற ஆங்கிலப் பத்திரிகையில் ஹசந்த விஜெநாயகே என்ற ஓவியர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் இழிவான முறையில் சித்தரித்து கார்ட்டூன்  வரைந்திருக்கிறார். ஜெயலலிதாவைத்தான் என்றில்லை எந்தப் பெண்ணை இப்படி சித்தரித்திருந்தாலும், மன்மோகன் சிங்தான் என்றில்லை, எந்த ஆணை இப்படி சித்தரித்திருந்தாலும் இது அநாகரிகத்தின் உச்சம். அரசியல் நையாண்டி வரைகலையையே அவமானப்படுத்தியிருக்கிறார் விஜேநாயகே.
 மன்மோகன் சிங், ஜெயலலிதா அரசியல் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் எனக்கு உண்டு. அதற்காக இப்படிப்பட்ட வக்கிரத்தனமான வெளிப்பாடுகளை ஏற்பதற்கில்லை----oru face-book,nanbar
இந்த படத்தையும் செய்தியையும் பார்த்ததும் சரியான கோபம் வந்தது...நண்பர்களுக்கு தெரிவித்துவிட்டு மெயில் அனுப்ப மட்டுமே முடிந்ததது.மும்பையில் இருப்பதால் நேரில் சென்று விவாதிக்க முடியாததில் வருத்தமே! தமிழர்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்கவேண்டும்.

Thursday 6 September, 2012

கன்னிப்பயணம் .....தொடர்ச்சி



விமானம் "ஜிவ்"வென்று மேலே எழும்பியது என்பதை அனுபவிப்பது சுகமோ சுகம். அடி வயிற்றில் ஒரு விதமான இம்சை. வலது பக்க கடைசியில் உட்கார்ந்ததால் இறக்கையின் அசைவுகளை பார்க்க முடிந்தது. ஏர்போர்டின் எல்லைக்குள்ளேயே நல்ல உயரத்திற்கு சென்ற விமானத்தை அழகாக இடது பக்கம் வளைத்து இன்னும் மேலே போக வைத்த விமானியின் திறமையை வியந்தேன்!.கழுகின் பார்வையில் சிங்கார சென்னையை பார்த்துகொண்டிருக்கும்போதே விலகி, மேகத்திற்கு மேலே போக ஆரம்பித்தது.சில நொடிகளில், மேக கூட்டங்கள் கீழே!கண்ணுக்கெட்டிய தூரம் வரை காளான்கள் போல, கொத்து கொத்தாக, வெண் மேகங்கள்.
ஒரே சீராக பறக்க ஆரம்பித்ததும், சீட் பெல்டை விடுவித்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பிற்காகவே காத்திருந்தது போல் ரெஸ்ட் ரூமை  நோக்கி படையெடுத்தார்கள்,மக்கள். பணிப்பெண்கள், தண்ணீர் பாட்டில்கள்,பேப்பர் விநியோகித்தார்கள். பிறகு வரிசையாக சாப்பாடு (வீட்டில் சாப்பிடலையா)ஸ்நாக்ஸ்,காபி,டீ,சப்ளை ....மறுபடியும் ஒரு அறிவிப்பு....செல்போன், எலக்ட்ரானிக் சாதனங்களை அணைக்கசொல்லி. சீட் பெல்டை அணியவும்.திடீரென வெளியில் ஒரே வெண்மை. மேக கூட்டத்தினுள் விமானம்.சட்டென இறங்கியது விமானம்.இப்போது
மழை மேகங்கள் வேகமாக எதிர் திசையில்...இப்போது விமானம் இன்னும் த்த
கீழே தாழ்ந்தது. என்ன ஒரு அற்புதமான அனுபவம்.
நகரத்தின் உயரமான கட்டிடங்கள்,மழை ஓடிக்கொண்டிருக்கும் கால்வாய்களும், தெரிய ஆரம்பிக்கும்போதே பக்கத்தில் ஏழு எட்டு விமானங்கள்!ஆமாம்,விமானம் ஓடுபாதையில் பறந்து, மெதுவாக தரையை தொட்டு ஓ..................................டி நின்றது.  மகளை காணும் சந்தோஷத்தில் நான்!!!
,

 

கன்னிப்பயணம் :

  
கன்னிப்பயணம் :
மகளிடமிருந்து போன். "அப்பா, இவர் பதினைந்து நாட்கள் ஆபீஸ் வேலையாக  வெளிநாடு செல்கிறார். நீயோ,அம்மாவோ வந்தால் நல்லது".
"அம்மாவிடம் பேசு" போனை என் மனைவியிடம் கொடுக்க "உங்கப்பாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம்.உணவெல்லாம் தயார் செய்துகொடுக்க நான் இருந்தால்தான் முடியும். இங்கே உன் தம்பி தங்கைகளை தனியாக விட்டுவிட்டு வருவது கஷ்டம். இரவு சொல்லுகிறேன்". போனை வாங்கி "நான் வர்றேம்மா"நீ கவலைப்படாதே"
என்றேன்.
அடுத்த நாளே (போக- வர) விமான டிக்கட் மெயிலில் வந்தது. 
"ஏம்ப்பா, ஹார்ட் பேஷன்ட் விமானத்தில் போகலாமா!" பீதியை கிளப்பியது, மகன்.
எதற்கு சந்தேகம்! நண்பருக்கும், டாக்டருக்கும் போனை போட்டு கேட்டதில் ஒகே சொன்னார்கள். எப்போதும்போல் மாத்திரைகள் (கை)பையில் இருக்கட்டும் என்றார்கள். மகளுக்கு, வருவதை போனில் உறுதி செய்தேன்.
மதியம் இரண்டரை மணி பிளைட்டிற்கு, 11.30 க்கே கால் டாக்சி வந்து விட்டது."ஏர்போர்டில் சாப்பிடுங்க. அதற்கப்புறம் 2 மணி நேரம் உள்ளது" என்று ஒரு  பொட்டலத்தை பையில் திணித்தாள் மனைவி.12.30க்கெல்லாம் விமான நிலையத்தை அடைந்தோம். உடன்  மகனும், இன்னொரு மகளும். என்கொயரியில்,விமானம் சரியான நேரத்திற்கு புறப்படுமா என்று விசாரித்து
விட்டு, பையில் இருந்த உணவை காலி செய்தேன்! 1.30 மணிக்கு செக்-இன்.அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே நடக்க ஆரம்பித்தேன். நடை     .    
நீண்டது. மூச்சு வாங்கியது. நின்று நின்று,நடந்து, செக்குரிட்டி செக் முடிந்து அமர்ந்தேன்.மறுபடியும் நீண்ட காரிடாரில் நடந்து உள்ளே சென்றால், ஆம்னி பஸ் போல இருக்கைகள். புஷ் பாக் இல்லை.மிதமான குளிர் காற்று.சரியான நேரத்தில் கேப்டன் பிரதிப்பின் 
அறிவிப்புடனும், ஏர் ஹோஸ்டஸ் (நேபாலியோ(!)-நல்ல உயரம்)சின் அவசர கால அறிவிப்புகளுடன்  விமானம் நகர ஆரம்பித்தது.(டாக்சியிங்). ரன் வேயின் முடிவு எல்லை வரை சென்று திரும்பி நின்றது.(மூச்சு வாங்குகிறதோ!).எல்லா என்ஜின்களும் இயக்கப்பட, சற்று தூரம் வேகமாக ஓடி, "ஜிவ்" வென்று மேலே எழும்பியது.
(தொடரும்) 
 

Friday 24 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம்...

enna nadakkuthu என்ன நடக்குது:
அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம்...
: அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம் : டெசோ மாநாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசு கொடுத்த தொல்லைகளை குற...

அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம் :டெசோ மாநாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசு கொடுத்த தொல்லைகளை குறிப்பிட்ட கலைஞர்,சிறிலங்காவில் தமிழ் அமைப்புகள் ஒற்றுமையாக இருந்திருந்திருந்தால் சுள்ளி கட்டு  போலவும் உடைக்க முடியாமல் இருந்திருக்கும் எனவும்,பிரிந்ததால் சுலபமாக எதிரி வீழ்த்த முடிந்தது  என்று கூறினார்....
முன்னதாக லூகாஸ் டி.வி.எஸ்.சிலிருந்து, பாடி, எஸ்டேட், அம்பத்தூர் ஒ.டி வரை,தாரை தப்பட்டை,மேளம்,செண்டை,என்று வரவேர்வு பலமாக இருந்தது.பொதுக்கூட்டம் மாநாடு போல இருந்தது.வழியெங்கும் மக்கள் இருபுறமும் நின்று  கலைஞரை காண மூன்று மணி நேரம் காத்திருந்தது அந்த காலத்தை நினைவு படுத்தியது.முன்னதாக அம்பத்தூர் நகர தி.மு.கழக செயலாளர்,ஜோசப் சாமுவேல் வரவேற்புரை ஆற்றினார்.ஜெகத்ரட்சகன் ,துரைமுருகன்,டி.ஆர் பாலு,எம்.பி.வில்லிவாக்கம் முன்னாள் சட்ட சபை உறுப்பினர் ப.ரங்கநாதன்,சுந்தரம்,ஆவடி நாசர்,ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Thursday 23 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:

enna nadakkuthu என்ன நடக்குது: அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:: அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:   நாளை நடக்க இருக்கும் "டெசோ"மாநாட்டு தீர்மான விளக்க கூட்டத்தில் கலைஞர் பங்கேற்க இருக்கிறார் என்பதால் உ...

அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:

அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:  
நாளை நடக்க இருக்கும் "டெசோ"மாநாட்டு தீர்மான விளக்க கூட்டத்தில் கலைஞர் பங்கேற்க இருக்கிறார் என்பதால் உடன்பிறப்புக்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்கிறார்கள். தி மு கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விழா நடக்க இருக்கும் மேடையை பார்வையிட்டார். உடன் வில்லிவாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன்,திருவள்ளூர் மாவட்ட கழக பொறுப்பாளர், சுதர்சனம்,அம்பத்தூர் கழக நகர செயலாளர் ஜோசப் சாமுவேல், ஆவடி நகர கழக செயலாளரும், நகராட்சி தலைவருமான மு.நாசர்,, மற்றும்  கழக நிர்வாகிகள்...

Wednesday 22 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: house tax new card is ready for distribution from...

enna nadakkuthu என்ன நடக்குது:
house tax new card is ready for distribution from...
: house tax new card is ready for distribution from chennai corporation, ambattur zone.the public can collect it by showing the old book w...

house tax new card is ready for distribution from chennai corporation, ambattur zone.the public can collect it by showing the old book without any cost.
16.8.2012 144.jpg
சொத்து வரி கட்ட புதிய அட்டையை மாநகராட்சி வழங்குகிறது. பொது மக்கள் பழைய புத்தகத்தை 
காட்டி பெற்றுக்கொள்ளலாம்!!!
எஸ்.எஸ்.ஆர்.சுகுமார்.
16.8.2012 143.jpg

Monday 20 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: கலைஞரின் அம்பத்தூர் பொதுக்கூட்டம் -தி.மு.க.வின...

enna nadakkuthu என்ன நடக்குது:



கலைஞரின் அம்பத்தூர் பொதுக்கூட்டம் -தி.மு.க.வின...
: கலைஞரின் அம்பத்தூர் பொதுக்கூட்டம் -தி.மு.க.வினரின் ஆலோசனை கூட்டம் :




கலைஞரின் அம்பத்தூர் பொதுக்கூட்டம் -தி.மு.க.வினரின் ஆலோசனை கூட்டம் :

enna nadakkuthu என்ன நடக்குது: பிக் பாக்கட்

enna nadakkuthu என்ன நடக்குது: பிக் பாக்கட்: பிக் பாக்கட் : சம்பள தினத்தன்று மட்டும் சுருசுருப்பாக வேலை(!)செய்து பணத்தை திருடுவது பிக் பாக்கட்காரர்களின் வேலை,தொழில்(!).உலகெங்கும் இதனா...

பிக் பாக்கட்

பிக் பாக்கட் :
சம்பள தினத்தன்று மட்டும் சுருசுருப்பாக வேலை(!)செய்து பணத்தை திருடுவது பிக் பாக்கட்காரர்களின் வேலை,தொழில்(!).உலகெங்கும் இதனால் பாதிக்க படுவது கூலி, சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம்தான்.

இதை தடுக்க சூரியனே மறையாது ஆட்சி புரிந்த நாட்டில் தலைநகரில்,
 5 பேருக்கு, நடு  ரோட்டில் தூக்கு தண்டனை, நிறைவேற்றப்பட்டது(1945!). பிக்-பாக்கட் அடிப்பவர்கள் பயந்து திருந்துவார்கள் என்ற எண்ணத்தில் செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை  பார்க்க கூடிய கூட்டத்தில் 500 பேர்களுடைய பர்ச்கள் பிக் பாக்கட் அடிக்கப்பட்டன.. எங்கேயோ படித்தது....Wallet

Sunday 19 August, 2012

Ra.Ki.Rangarajanum punai peyarkalum, nettil vanthathu

” - ஹம்ஸா’ என்ற பெயரில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியதும், துரைசாமி என்ற பெயரில் துப்பறியும் கதைகள் எழுதியதும் ரங்கராஜன்தான். அது தவிர, சூர்யா, 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' போன்ற பல புனை பெயர்களில் அவர் நிறைய எழுதியிருக்கிறார். கிருஷ்ணகுமார் என்ற புனைபெயரில் ”கோஸ்ட்”, ”எனக்குள் ஒரு ஆவி” போன்ற தலைப்புகளில் இவர் எழுதிய அமானுஷ்யத் திகில் தொடர்கள் அக்காலவாசகர்களால் மறக்க இயலாதவை. மொழிபெயர்ப்பிலும் சாதனை படைத்திருக்கிறார். புகழ்பெற்ற நாவலான பாபிலானை பட்டாம்பூச்சி என்றும், இன்விசிபிள் மேனை கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான் என்றும் தொடர்களாக எழுதியிருக்கிறார். காதல் மேல் ஆணை (டேனியல் ஸ்டீல்), லாரா (ஷிட்னி செல்டன்), ஜெனிபர் போன்றவை வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. ஷிட்னி செல்டன் தமிழகத்தில் பலருக்குத் தெரியக் காரணம் ரா.கி.ரங்கராஜன்தான் என்று சொன்னால் அது மிகையில்லை. - “
பத்திரிகையாளராக, ‘சக்தி’யில் பணியைத் தொடங்கி, தம் வித்தக எழுத்துகளால், தமிழ்மக்களின் இதயம் நிறைந்த ரா.கி.ரங்கராஜன், தம் பெயரை மறைத்துக் கொண்டு, தம் முகத்தையும் வெளிப்படுத்தாமல், 42 ஆண்டுகளாக, குமுதம் ஆசிரியர் குழுவில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணி ஆற்றியவர். அதில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், எழுத்தின் மேல் கொண்ட தணியாத காதலால், எழுதுவது எப்படி? என்று, இளம் எழுத்தாளர்களுக்கு, எழுத்துக்கலையைக் கற்றுத்தர நூல் எழுதியவர்.
குமுதத்தின் புகழ்பெற்ற அரசு பதில்களில், நடுநாயகமான ‘ர’ என்ற எழுத்துக்குச் சொந்தக்காரர்தான், நம்முடைய ரங்கராஜன். குடந்தையில் பிறந்து, தமிழ் அன்னையின் மீது தணியாத பற்றுக்கொண்டு, காலமெல்லாம் எழுதிக் குவித்தவர். இவருடைய எழுத்து ஓவியத்தில் புகழ் பெற்றவை திரைப்படமாக வந்த இது சத்தியம், சுமைதாங்கி, போன்ற காலத்தை வென்ற காவியங்கள் ஆகும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், அடையாறு புற்று நோய் மருத்துவமனையில், தாம் இறப்பதற்கு முன்பு கடைசியாக வாசித்துக் கொண்டு இருந்த, தி மாஸ்டர் கிறிஸ்டியன் என்ற மேரி கோரெல்லியின் நாவலை மொழிபெயர்த்து, அண்ணாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகின்ற வகையில், குமுதம் இதழில் வெளியிட்டார். உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை வரலாறையும் எழுதினார். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, தன்னம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் எழுதி வந்தார். அவரது எழுத்தில் இழையோடும் நகைச்சுவை, வயிறு குலுங்க வைக்கும். 

தம் பெயரை மறைத்துக் கொள்வதற்காக, மோகினி, சுந்தர பாகவதர், சூர்யா, ஹம்சா, துரைச்சாமி, கிருஷ்ணகுமார், மாதவி, வினோத் என்று அவ்வப்போது தோன்றிய பெயர்களில் எல்லாம் தன் படைப்புகளை வெளியிட்ட ரங்கராஜன், தம்முடைய உண்மை முகத்தையும், பெயரையும் வெளிப்படுத்தியதே இல்லை. இப்படி புகழை விரும்பாத, ஒரு பற்று அற்ற ஞானியாக வாழ்ந்து மறைந்து உள்ள ரா.கி.ரங்கராஜன், தமிழ் எழுத்து உலகை அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேல் அழகுபடுத்திய பெருமகன் ஆவார். 

அன்னாரது மறைவு, தமிழ் எழுத்து உலகத்துக்குப் பேரிழப்பு. அவர் உடலால் மறைந்தாலும், தம்முடைய எழுத்துகளால் தமிழ் அவர் ஏற்றி வைத்த இலக்கியச்சுடர் என்றும் அணையாது. 

Saturday 18 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம.

enna nadakkuthu என்ன நடக்குது: எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம.

enna nadakkuthu என்ன நடக்குது: எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம.

enna nadakkuthu என்ன நடக்குது: எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம.: எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குமுதத்தில் அ ண்ணாமல...

எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம.


எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குமுதத்தில் அ ண்ணாமலை ர ங்கராஜன் சு ந்தரேசன் அரசு பதில்கள் மிகவும் அருமையாக இருக்கும். 
ரா.கி. ரங்கராஜன் எழுதிய குடும்ப தொடர் கதைகள் சுவாரசியமாக இருக்கும்.



Tuesday 14 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: இந்திய சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள். சும்மா கிடை...

enna nadakkuthu என்ன நடக்குது: இந்திய சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள். சும்மா கிடை...: இந்திய சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்.பல தியாகிகளின் உழைப்பு! தியாகம் .சிறை சென்று கொடுமைகளை அனுபவித்தா...
இந்திய சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்.பல தியாகிகளின் உழைப்பு! தியாகம்.சிறை சென்று கொடுமைகளை அனுபவித்தார்கள்.அதன் பலனை இன்று நாம் அனுபவிக்கிறோம்!!! தமிழ்நாடு சாதி ஒழிப்பிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திலும் முன்னணி மாநிலம்.
 சென்னை மாநகராட்சியின் ஏழாவது மண்டலமான அம்பத்தூரில், மண்டல தலைவர் ஜோசப் சாமுவேல், தேசிய கோடியை ஏற்றுகிறார்.அருகில் மண்டல அலுவலர், சிவஞானம் மற்றும் அலுவலக ஊழியர்கள்,பள்ளி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள்.



ஈ.வெ.ராமசாமி நாயகர்,    "பெரியார்"  என்று அழைக்கப்பட்டது அவர் பிறந்த  ஜாதியால் அல்ல. 
ஜாதி ஆதிக்கத்தை ஒழிக்கவும் ஒடுக்கப்பட்டவர்கள், வறுமையிலிருந்து விடுபட்டு பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக பாடுபட்டதால்தான்.
அந்த நோக்கத்தை "கக்கன்"அவர்களை அமைச்சர் ஆக்கியதன் மூலம் காமராஜர் நிறைவேற்றினார்.
கலைஞர் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் சார்பாக உயர்ந்த பதவிகளை அவர்களுக்கு அளித்து கவுரவ படுத்தினார்.



அதன் ஒரு துளியே, இங்கேயே பிறந்து,ராமசாமி உயர்நிலை பள்ளியில் படித்த ஒரு இளைஞனை கழக நகர செயலாளராக பதவியில் அமர வைத்தார். அந்த இளைஞர்,ஜோசப் சாமுவேல், இன்று 7 வது மண்டலமான அம்பத்தூரின் தலைவராக நகராட்சி கட்டிடத்தில் தேசிய கொடி  ஏற்றியது உண்மையான இந்திய சுதந்திரத்தின் பலன் ஆகும்.  




































Monday 6 August, 2012

சென்னை மாநகராட்சியின் 7-வது மண்டலம்-அம்பத்தூர் மண்டல மாதாந்திர கூட்டம்:


அம்பத்தூர் (7-வது மண்டலம்) மாதாந்திர கூட்டம் 30.07.2012,மண்டல தலைவர் ஜோசப் சாமுவேல் தலைமையில் நடைபெற்றது.மாமன்ற உறுப்பினர்கள் நீலகண்டன், ராஜேந்திரன் என்கிற சு.ரவி, தமிழ்செல்வன்,
ஆகியோர் கலந்துகொண்டனர்.
79 -வது வார்டு ராம்நகர் --பூங்கா pபராமரிப்புக்காக                                           5.20
      லெனின் நகர் பூங்கா சுற்று சுவர் -பராமரிப்புக்கு                                         7.25
80  பாரதி நகர் பூங்கா பராமரிப்புக்கு                                                                          1.73
81 கிருஷ்ணாபுரம்  "        "                                                                                                 5.09
91 முகப்பேர் மேற்கு "    "                                                                                                  8.16
     முகப்பேர் ஏரி ஸ்கீம் அபிவிருத்திக்காக                                                           7.29
88 மில்லினம் பார்க், சாலை,நாற்காலி செய்யும் பணிக்காக                       8.58
89 கோல்டன் காலனி சுவர் கடிகாரம் மற்றும் ஆண்டு பராமரிப்பு            1.87
93 ஜெ.ஜெ. நகர் கிழக்கு 1 -வது ப்ளாக்கில் விளையாட்டு பொருள்கள்,குடிநீர் 
     வசதி செய்யும் பணிக்கு                                                                                                    2.58 
ஆகியவற்றிற்கு 24.8.2012 அன்று டெண்டர் விடப்படுகிறது, என்று மண்டல தலைவர்  ஜோசப் சாமுவேல் கூறினார்.   

Saturday 4 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: கவிஞர் ஜெயந்திகுமார் சாலைவிபத்தில் பலி

enna nadakkuthu என்ன நடக்குது: கவிஞர் ஜெயந்திகுமார் சாலைவிபத்தில் பலி: கவிஞர் ஜெயந்திகுமார் சாலைவிபத்தில் பலி  கவிஞர் ஜெயந்திகுமார் 03-08-2012 இரவு 8.30 மணியளவில் சாலைவிபத்தில் பலிய...

கவிஞர் ஜெயந்திகுமார் சாலைவிபத்தில் பலி



கவிஞர் ஜெயந்திகுமார் சாலைவிபத்தில் பலி

 கவிஞர் ஜெயந்திகுமார் 03-08-2012 இரவு 8.30 மணியளவில் சாலைவிபத்தில் பலியானார்.
உடலளவில் மரணம் பிரித்தாலும் எம் உள்ளத்தை விட்டு எவர் பிரிப்பார்?

thanks to south indian crime point and Mr.Yuganesan,Editor.