Friday 18 May, 2012

வாழ்கபோலிஸ்!!! வாழ்க டெக்னாலஜி!!!


வாழ்கபோலிஸ்!!!   வாழ்க டெக்னாலஜி!!!

போலிஸ் என்றால் படத்திலலேட்டா கடைசில வருவாங்க.
நடைமுறையில போலிசு கிட்ட போகவே சாதாரண மக்களிடம்  
இன்றும் அச்சம் உள்ளது.
இது அந்த மாதிரி அல்ல.
சென்னை கிண்டி நூறடி ரோடில் எம்.எம்.டி.எ. நிறுத்தத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த நடு வயது பெண்மணியிடம் செயினை அறுத்துக்கொண்டு 
ஒரு "பைக்"காரன் வேகமாக சென்றுவிட்டான். 
அந்த பெண்மணி நாடு ரோட்டில் "ஐயோ, என் புருஷன் கொன்று விடுவானே"என்று பெருங்குரலில் அழ, யாரோ ஒரு புண்ணியவான் 
போலிசுக்கு போன் பண்ண 'சர்'ரென ஜீப்பில் வந்த உதவி 
கமிஷனர்,விசாரணையில் இறங்கினார்.
பிறகு, லேப்டாப்பில் தட்டி, கண்காணிப்பு கேமராவில் 
திருடனின் வண்டி நெம்பரை கண்டுபிடித்து 
ஆளை பிடிக்க வைத்து விட்டார்.
அந்த பெண்மணியிடம் ஸ்டேஷனில் வந்து 
செயினை வாங்கிகொள்ளும்படி சொன்னார்.


வாழ்கபோலிஸ்!!!   வாழ்க டெக்னாலஜி!!!! நம்ப முடியுதா?