Sunday 25 March, 2012

வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்!

வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்! 
மதிய உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது,  வலது பக்க மார்பில் ஒரு மாதிரி இம்சை. கை கழுவி, படுத்தேன். வலி விநோதமாக இருந்தது.வாய்வாக இருக்குமோ! படுத்தாலும் குறையவில்லை. ஆட்டோவை தேடினால் உணவு நேரமாதலால் ஒன்றையும் காணவில்லை. ஓட்ட தெரியாத ஒருவன், நண்பன் வண்டியை ஓட்டி வந்தான். முதல் உதவியாவது எடுக்கலாம் என்று பார்த்தால் தனியார் டாக்டர் ஒருவரும் இல்லை.
ஹார்ட் அட்டாக்:
அருகிலிருந்த மருத்துவமனைக்கு வந்ததும் வலியே இல்லை. இருந்தாலும் மனது கேட்கவில்லை.வந்தது வந்தோம் டாக்டரை பார்த்து விடுவோம் என்று உள்ளே போய் பார்த்தால் பயிற்சி டாக்டர் வந்து விவரம் கேட்டு இ சி ஜி எடுத்து விட்டு உங்களுக்கு வந்தது "இருதய வலி", என்று சிறப்பு டாக்டரிடம் தகவல் சொல்ல அவர் வந்து பரிசோதித்து விட்டு உடனடியாக மருத்துவ மனையில் சேர்ந்து பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள், இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து என்று அறிவுறித்தினார்.
 நாற்பது ஆயிரத்திற்கு   மேல் பில்,பை-பாஸ், பண்ண 1.75,லக்ஷம்  
 உடனடியாக MMM மருத்துவமனையில் சேர்ந்து,  ஆஞ்சியோ எடுத்தார்கள். கண்டிப்பாக பை-பாஸ், பண்ண 1.75,லக்ஷத்திற்கு பில்லை போட்டு உடனடியாக கொடுத்தார்கள்.  
இதற்கே நாற்பது ஆயிரத்திற்கு   மேல் பில்லாகிவிட்டது. 
ஒரு பக்கம் பயம். கடன் வாங்கி செய்ய தயக்கம். 

பணம் தயார் செய்துகொண்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினோம்.
மகளும் மகனும் சம்பாதித்தாலும் மற்றொரு மகள் படித்துக்கொண்டிருந்தாள். ஒரு பக்கம் அவர்களுக்கு பயம். எனக்கு இவ்வளவு பணம் கடன் வாங்கி செய்ய தயக்கம்.
 ஏழைகளுக்கென்றே இருக்கும் பொது மருத்துவமனை:

மீடியா நண்பர்களின் ஆலோசனைப்படி, ஏழைகளுக்கென்றே இருக்கும் பொது மருத்துவமனைக்கு சென்று உயர் அதிகாரியிடம் சொன்னதும், உடனடியாக இருதய மருத்துவருக்கு தெரிவித்து, கவனிக்க சொன்னார்.
தனியார் மருத்துவமனையின் ரிபோர்ட்டுகளை பார்த்துவிட்டு, மாத்திரைகளையே சாப்பிடுங்கள் அறுவை சிகிச்சை வேண்டாம் என்று ஆலோசனை கூறினார். விசாரித்ததில், அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியல் நீளமானது என்றார்கள்.
கடவுள் பேரில் பாரத்தை போட்டுவிட்டு மாத்திரைகளை முழுங்கி, வேலைகளை, அலைச்சல்களை குறைத்துக்கொண்டேன்.
மறுபடியும் வலி :
அடுத்த வருடம் ஒரு வி.ஐ.பி.யை சந்திக்க சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து எதிர்புறம் செல்ல சப் வே யில் நடந்தபோது, மார்வலி ஆரம்பித்தது.
அந்த ஏரியா எம்.எல்.ஏ, நண்பரிடம் போனில் விவரத்தை கூறியதும் உடனடியாக ஸ்கூட்டரில் வந்து, அவசர பிரிவில் அனுமதிக்க செய்தார். இ.சி.ஜி.,எக்கோ போன்ற டெஸ்டுகளை ஒவ்வொரு இடத்திலும் நீண்ட கியு இருந்தாலும் உடன் வந்த உதவியாளர் எடுத்துசொல்லி எல்லா இடங்களிலும் உடனுக்குடன் டெஸ்டுகளை எடுத்த வேகம் நம்ப முடியாதது.
எமர்ஜென்சி வார்டில்  

துறைத்தலைவர் உடனடியாக அட்மிட் ஆக வேண்டும் என்று சொன்னதால், எமர்ஜென்சி வார்டில் படுக்க வைத்துவிட்டார்கள்.
எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனைவிக்கு தகவல் கொடுத்தால் பயப்படுவார்கள். உடன் ஒருவர் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.யாரை அழைப்பது. மகனும் மகள்களும் வேலைக்கும், கல்லூரிக்கும் சென்றுவிட்டார்கள்.
மகனுக்கு போனில் தகவல் சொல்லி, வேறு  யாரிடமும் போனில் தகவல் சொல்லாமல் ஆஸ்பிடலுக்கு வரவழைத்தேன்.
தலைமை செவிலியர் வந்து என் பெயரை கேட்டார். எதற்கு என்று கேட்டதற்கு "உங்களுக்கு என்று நோயாளி-ரிபோர்ட் தயார் செய்ய" என்றார். 
"அப்போ இவ்வளவு சோதனைகளும் பெயரில்லாமலா எடுத்தார்கள்?"
அதில் எம்.எல்.ஏ-வி.ஐ.பி. என்றிருந்தது.
பத்து நாட்கள் முதல் தரமான சிகிச்சை அளித்தது மட்டுமல்லாமல் மூன்றிற்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்கள், தினமும் வெளி நோயாளிகளை பார்த்த பிறகு, உள்நோயாளிகளையும் பார்த்து உரிய ஆலோசனைகளை வழங்கிவிட்டு மதிய உணவிற்கு சென்றது அவர்கள் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது.
அவசர சிகிச்சைக்கு வந்துகொண்டே இருக்கும்   நோயாளிகளுக்கு, படுக்கை தரமுடியாமல் இருக்கும் நிலைமையை, தினமும் பார்த்ததால், மிகவும் சங்கடமாயிருந்தது. என்னால் ஒரு நோயாளிக்காவது   படுக்கை வசதி கிடைக்கும் என்பதை எண்ணி, வற்புறுத்தி டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டிற்கு திரும்பினேன். 
 படுக்கைகள், வேலை செய்பவர்கள் குறைவாக இருப்பதால் ஈடு கொடுக்க முடியவில்லை  

பொது மருத்துவ மனைக்கு ஆயிரக்கணக்கில் வரும் நோயாளிகளை, படுக்கைகள், (வேலை செய்பவர்கள்) குறைவாக இருப்பதால் ஈடு கொடுக்க முடியவில்லை என்ற உண்மையை உணர முடிந்தது. 
மக்கள் அசுத்தப்படுத்துவதை தடுக்க 

வரும் மக்கள் அந்த இடத்தை அசுத்தப்படுத்துவதை தடுக்க சுழற்சி முறையில் மாணவர்கள், தன்னார்வ தொண்டர்களை பயன்படுத்தலாம்.

1 comment:

Jackiesekar said...

தன்னம்பிக்கை வந்துடுச்சின்னா எதை பத்தியும் கவலைபடமாட்டோம்..ஒரு பத்திரிக்கையாளர் பார்வையில் நீங்கள் அழகாக அரசு பொது மருத்துமணையின் இயலாமையை பதிவு செஞ்சி இருக்கிங்க..