Wednesday 26 October, 2011

தீபாவளி
புதிய துணி,நகை பட்டாசு வாங்குவதில் நகரெங்கும் மக்கள் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.வெளியூருக்கு செல்லுவோர்கள் கூட்டம் கோயம்பேட்டிலும்,எக்மோர்,சென்ட்ரல், தாம்பரம் எங்கும் நிரம்பியது. எல்லோருக்கும் தீபாவளி மகிழ்ச்சி!பெரிய பாத்திரங்களில் உணவு வகைகளோடு அன்னை தெரசா இல்லத்தில் இறங்கினோம்!பரிமாறும் போது, காலில் தட்டி கூப்பிட்ட மூதாட்டி, "இன்னும் கொஞ்சம் போடு!இது போல சாப்பிட்டு வருஷக்கண்க்காயிற்று!" வீட்டிற்கு வந்து சாப்பிட உட்கார்ந்தேன்! உணவு இறங்கவில்லை.