Monday 25 June, 2012

தி.மு.க.வின் போராட்டம்


தி.மு.க.வின் முக்கிய தலைவர்களை பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவதிலேயே குறியாக இருக்கும் ஜெ .அரசை எதிர்த்து ஜூலை 4-ந் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். மாவட்ட,வட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு நடத்தப்பட இருக்கும் இந்த ஆர்பாட்டத்தில் யார் யார் பங்கு பெறுவார்கள் தலைமை ஏற்பார்கள் என்பது பற்றி ஆ லோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் தலைமையில் அம்பத்தூரில் நடைபெற்றது.புரசை ரங்கநாதன்,கிருஷ்ணசாமி,சுந்தரம்,நீலகண்டன்,மற்றும் திருவள்ளூர் மாவட்ட வட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி அவர்களின் சென்னை விஜயத்தை சிறப்பான வரவேற்பளித்து  சாதனை படைக்கவேண்டும் என்றும் தீர்மானம் போடப்பட்டது.விழா  ஏற்பாடுகளை நகர செயலாளர் ஜோசப் சாமுவேல் செய்திருந்தார்.