Sunday 22 January, 2012

தி.மு.க.புள்ளிகள் கைது



முன்னாள் தி.மு.க.அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் கைது:  
  தி.மு.க புள்ளிகள் கைதாவதும் நீதிமன்றம் அவர்களை விடுவிப்பதும் ஜெ.ஆட்சிக்கு வந்ததும் தினசரி நிகழ்ச்சி ஆகிவிட்டது.
பொட்டு சுரேஷில் இருந்து அன்பழகன் வரை கைதாகி இப்போது வெளியே வந்துள்ளனர்.
ஆனால் புரசை ரங்கநாதன் வழக்கில், அவர் மீது போடப்பட்ட வழக்கு, சட்ட விரோதம் என்று விடுதலை செய்யப்பட்டதில் இருந்தே ஜெ.அரசின் நோக்கம் என்ன என்பது தெளிவாகிவிட்டது.
மின் பற்றாக்குறை,சாலை சீரமைப்பு, தானே புயலில் சீரழிந்த கடலூர் மக்களுக்கு நிவாரணம் போன்ற முக்கிய பணிகளில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஓட்டு போட்ட மக்களின் கோரிக்கை,எண்ணம், எதிர்பார்ப்பு,எல்லாம்.
முதல்வர் காதில் இந்த கோரிக்கை விழுமா? நடவடிக்கை எடுப்பாரா?