Wednesday 28 December, 2011

மும்பை அதிசயங்கள்:3 பவர் கட்!!!

மும்பை அதிசயங்கள்:,3 
ஆட்டோகாரரிடம் போகவேண்டிய இடத்தை சொன்னதும், "பந்த்ரா" என்றார்.
வியாபாரத்திற்காக கத்து வைத்திருந்த எண்-இந்தி கைகொடுத்தது.
செல்ல வேண்டியதூரம் ராயபேட்டை மணிகூண்டிலிருந்து  போலீஸ் ஸ்டேஷன்
 வரை இருக்கும். அவர் கேட்டது பதினைந்து!   சரியாக நண்பரின் வீட்டு எண் கேட்டு வண்டியை நிறுத்தினார்.இருபது
ரூபாய்க்கு ஐந்து ரூபாய் சில்லறை கொடுத்தார்.
நண்பரின் இடம் மூன்றாவது தளம். 
வேர்த்து விறுவிறுத்து மேலே சென்று காலிங் பெல்லை 
அழுத்தினோம்! நண்பர் வந்து கதவை திறந்தார்.  
மும்பையில் அதிக குளிர்! நண்பகல் இரண்டு மணிக்கும்
குளிர்தான்.வேர்த்திருந்ததால் :.பேனை போடச்சொன்னேன்!
நண்பர் சொன்னார் பவர் கட்.காலையில்,மாலையில் ஒவ்வொரு மணி நேரம்.
பிளாஸ்டிக் விசிறி கை கொடுத்தது.
திரும்புகையில்,நடந்தே ரயில்வே ஸ்டேஷனக்கு வந்துவிட்டோம்.முப்பது ரூபா
கூப்பனை மெஷினில் செலுத்தி எடுத்துக்கொண்டேன்.
வந்த வண்டியில் ஏறிவிட்டோம். சக பயணி சொன்னார்.அது விரைவு வண்டி என்று!
தானே ஸ்டேஷனில் இறங்கி வேறு வண்டி பிடிக்க முயன்றோம்.மனிதர்களா அவர்கள்
.ஒ வென்று கூச்சலிட்டபடி தள்ளிக்கொண்டு ஓடியதில் எங்களுக்கு புரிந்து விட்டது.இந்த
கூட்டத்தில் நம்மால்  ஏற முடியாது.ஏறினாலும், இறங்க வேண்டிய இடத்தில் இறங்க முடியுமா
என்பதும் சந்தேகமே!
வெளியில் வந்து ஆட்டோ பிடித்து டோல்கேட் வரை வந்து,அங்கிருந்து மற்றொரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்!
நல்ல அனுபவம்!!