Thursday 28 June, 2012

பிறந்த நாளும், குழப்பங்களும்-பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது.

பிறந்த நாளும், குழப்பங்களும் :
மாலையில் வீடு திரும்பிய மகள் கேட்டாள் "அப்பா, இன்னிக்கு உனக்கு பிறந்த நாளா?"
"சர்டிபிகேட் படி ஆமாம்."
"பேஸ் புகல வாழ்த்துக்கள் பார்த்தேன்!"
"அப்போல்லாம், ப்ளே ஸ்கூல் கிடையாதேம்மா. அதிக குறும்பு செய்ததால், ஒரு வருடம் முன்னேயே 4 வயதிலேயே ஸ்கூலில் சேர்க்க பிறந்த தேதிய மாத்தி குடுத்துட்டாங்க."
"எங்க அம்மா தான் என் பிறந்த நாளை ஞாபகம் வைத்து கொண்டாடுவார்கள்.எனக்கு பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது.
நான் அன்று வீட்டிற்கே வரமாட்டேன்! இரவு இரண்டாவது ஷோ முடிந்ததும்தான் வருவேன்!
திருமணத்திற்கு பின்பும் இது தொடர்ந்தது. இப்போது கூட உங்கள் மகிழச்சிக்காகதான் புது துணியை கூட அணிகிறேன்!"
"ஆமாம், இப்போதுகூட பிறந்த நாள் அன்னிக்கு காலையில் சென்று  இரவில் தானே வருகிறீர்கள். அப்படி எங்க தான் போறீங்க!"
"ஏதாவது ஒரு முதியோர் இல்லத்திலோ, ஆதரவற்றோர் இல்லத்திலோ உணவு பரிமாறி விட்டு, உண்டு, அன்றைய பொழுதை அவர்களுடன் கழிப்பேன்! "
இதை இன்று வரை யாரிடமும் சொன்னது கூட கிடையாது.

No comments: