Wednesday 10 November, 2010

Raasaa....Raasaa.

Ramasamy - இன் குறிப்புக்கள் என்னதான் செய்திட இயலும் என்னால்???? எனக்குத் தனிப்பட்ட வகையில் வந்த மின்னஞ்சல் பதிவு இதுby Ramasamy Duraipandi on 11 நவம்பர் 2010, 02:44 க்கு
எனக்குத் தனிப்பட்ட வகையில் வந்த மின்னஞ்சல் பதிவு இது

ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள்
1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.



இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக -அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?



இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.



தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.



பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும். அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.



தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.



இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம் ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.



ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.



இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும். ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?



ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.



"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'! Please forward this message to all of your friends..... Think and act -- *உங்கள் நண்பன் ............. *S.SENTHILKUMAR. Lecturer, Department of Management studies, 

கருத்து · பகிர்தல்
Sanjeevi Manoharan சீ..நாமெல்லாம் முட்டாள்கள்!
Ssr Sukumar முட்டாள்கள் அல்ல நண்பா.உடனடியாக செயல்பட் முடியாதவர்கள்.ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் வாய்ப்பையும் முறையாக பயன்படுத்தாதவர்கள்?????
சில வினாடிகள் முன்னால் · விருப்பம்விருப்பமின்மைஉங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
முட்டாள்கள் அல்ல நண்பா.உடனடியாக செயல்பட் முடியாதவர்கள்.ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் வாய்ப்பையும் முறையாக பயன்படுத்தாதவர்கள்?????...
thank you ramasamy duraipandi....

enna nadakkuthu nattula என்ன நடக்குது நாட்டில: ஜல் புயலும் மகனின் அமெரிக்க பயணமும்

enna nadakkuthu nattula என்ன நடக்குது நாட்டில: ஜல் புயலும் மகனின் அமெரிக்க பயணமும்

Sunday 7 November, 2010

ஜல் புயலும் மகனின் அமெரிக்க பயணமும்

சந்தானம் என் அக்கா மகன்.புற்று நோய் சம்பந்தமான ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் வாங்கியவன்.ராத்திரி பகலாக ஆராய்ச்சி செய்து இப்போதுதான் பட்டம் வாங்கினான்.
அவனுக்கு கல்யாணத்திற்கு தீவிரமாக பெண் பார்த்தோம்.ஒன்றும் சரியாக அமையவில்லை.மேல் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது அவனது திட்டம். மனைவியுடன் அனுப்பவேண்டும் என்பது சகோதரியின் விருப்பம்.இந்த காலத்தில் பெண் அமைவது கடினமாக உள்ளது.

அமெரிக்காவிலிருந்து அழைப்பு கடிதம் வந்துவிட்டது.நவம்பர் மாதம் 8 ந்தேதி அதிகாலையில் நான்கு மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ்-ல் செல்லவேண்டும்.ஒரு மாதம் முன்பே டிக்கட் அனுப்பிவிட்டது அமெரிகக அலுவலகம்.

நூறு பேருக்குமேல் உள்ள பெரிய குடும்பத்தில் அமெரிக்கா போகும் முதல் ஆள்.நல்ல பெட்டியாக வாங்கு.தேவையான மாத்திரைகள் எடுத்துக்கொள்.சைவ உணவு அதிகம் கிடைக்காது.எல்லாவற்றிலும் மாட்டிறைச்சி இருக்கும்.கேட்டு சாப்பிடு.என்று ஆளாளுக்கு ஆலோசனைகள்.உள்ளூரிலிருந்தும், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களிடமிருந்தும் போனில் அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன.இதில் தீபாவளி வேறு.

எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது.திடீரென்று இந்த 'ஜல்'புயல் பற்றி செய்தி வரும்வரை.கிளம்புவதற்கு நான்கு நாட்களுக்கு முன் மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது.வழியனுப்ப உறவினர் கள கூட்டம் வீடு நிரம்பி வழிய கல்யாண வீடு மாதிரி ஜே ஜே என்றாகிவிட்டது.காலையிலிருந்து கரண்டை கட் பண்ணி விட்டார்கள்.புயல் கரையை கடந்த பிறகுதான் மின்சாரம் வரும் என்றார்கள். புயல் சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே தரையை கடக்கும், என்று வந்த செய்திகள் எல்லாம் வயிற்றை கலக்கின.

பாவம் சந்தானம் சரியாக தூங்கி பத்து நாளாகிவிட்டது.வீட்டிலோ கூட்டம்.படுக்க கூட இடம் இல்லை.புயலால் பயணத்தை தொடரலாமா என்று ஒரே குழப்பம்.அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பும் விமானத்திற்கு,ஒரு மணிக்கே அங்கு இருக்க வேண்டும்.
மாலை ஆறு மணிக்கு மின்சாரம் வந்தது.மோட்டார் போடாமல் மக்கள் குளிக்காமல்,சாப்பிட்ட பாத்திரங்கள் கழுவாமல் ஒரே இம்சை.மழை தண்ணீர்,கேன் வாட்டர் என்று ஓரளவிற்கு நிலைமையை சமாளித்தோம்.
பன்னிரண்டு மணிக்கு காரில் கிளம்பினோம்.கிண்டியருகே மரம் ரோடின் குறுக்கே கிடந்ததால் நீளமாக வண்டிகள் நின்றுகொண்டிருந்தன.வேளச்சேரி ஆதம்பாக்கம் நங்கநல்லூர் என்று சுற்றி ஒரு வழியாக ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

இன்று பிளைட் இருக்குமா இருக்காதா, தாமதமாகுமா என்றெல்லாம் கவலையுடன் வந்த எங்களுக்கு பிரிட்டிஷ் விமானத்தை பார்த்ததும் நிம்மதியாயிற்று. சரியான நேரத்திற்கு விமானம் கிளம்பிச்சென்றது."வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன்தான் என்றார் ஒரு பெரியவர்."ஜல்"புயல் பலவீனமடைந்து வருகிறது என்றது டி.வி.செய்தி.இத்தனை கலாட்டாவில் பலவீனம் ஆனது நாங்கதான்.

Tuesday 2 November, 2010

Interview with Jeyamohan

Interview with Jeyamohan

Iron Lady of TN - Part2

Walk the Talk: M Karunanidhi

See My Iron Lady!!! Part 3

See My Iron Lady!!! Part 1 of 3

soorya kathir.com

sooryakathir.com charu-vin

charu niveditha writer:வரும் தேர்தலில் தி.மு.க.தோற்பது உறுதி.-சாரு.

‘‘எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; வரும் தேர்தலில் திமுக தோற்கப் போவது உறுதி. காங்கிரஸைப் பொறுத்தவரை ராகுல் காந்தி அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர். சோனியாவின் விருப்பம் அதற்கு மாறானது. காரணம், தன்னுடைய அடியாளான ராஜபக்ஷேவை வைத்து இலங்கைத் தமிழர்களை ஒழித்துக் கட்டிய படுபாதகச் செயலை கருணாநிதி கண்டுகொள்ள வில்லை; முரசொலி என்ற பத்திரிகையில் கவிதை மட்டுமே எழுதினார் என்பதால் சோனியாவுக்கு கருணாநிதியின் மீது தனிப்பட்ட நன்றி உணர்வு உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸில் உள்ள தொண்டர்களின் எண்ணிக்கையை விட தலைவர்களின் எண்ணிக்கை ஜாஸ்தி என்பதால் காங்கிரஸ் திமுகவுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக தோற்பது உறுதி. இது கருணாநிதிக்கும் தெரியும். தமிழ்நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் அவ்வளவு ஒன்றும் திறமைக் குறைவானவர்கள் இல்லை. இதற்குள் கருணாநிதியிடம் மக்களின் எண்ண ஓட்டத்தை அவரிடம் சொல்லியிருப்பார்கள். இந்த விஷயத்தில் கருணாநிதி பரவாயில்லை. குறைந்த பட்சம், அதிகாரிகள் சொல்வதை காது கொடுத்தாவது கேட்பார். ஜெயலலிதாவாக இருந்தால் உண்மைநிலையைச் சொன்ன அதிகாரிகளை சஸ்பென்ட் செய்து விடும் அளவுக்கு ‘ஜனநாயக உணர்வு’ கொண்டவர். வரப் போவது அதிமுக ஆட்சிதான் என்பதாலேயே தமிழக மக்களின் அடுத்த ஐந்து ஆண்டுகளைப் பற்றி இப்போதே எனக்குக் கவலையாக இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டை இரண்டு திராவிடக் கட்சிகளும் குத்தகை எடுத்துக் கொண்டு கொள்ளை அடிக்கின்றன. ஆனால், திமுக ஆட்சியில் கொள்ளையின் அளவு அதிகம். அவர்கள் 100 கோடி என்றால் இவர்கள் 60,000 கோடி 70,000 கோடி என்று அடிக்கிறார்கள். கக்கன் போன்ற தலைவர்களை எண்ணி ஏக்கம் கொள்கிறேன்’’நன்றி.சுர்யகதிர்.காம்