Saturday 28 April, 2012

ஜனநாயகம் படும் பாடு!!


ஜனநாயகம் படும் பாடு!!

சட்ட சபையில் திமுக உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கூறி மக்கள் மன்றத்தில் எங்கள் கருத்தை கூற தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம் வாயிலாக எங்கள் கருத்துக்களை பதிவு செய்வோம் என்று திமுக தலைவர் கூறினார்.அதன்படி முதல் கூட்டம் வட சென்னை பெரவள்ளூரில் நடந்தது. முதலில் பேசிய துரை முருகன் சட்ட சபையில் திமுக உறுப்பினர்கள் நடத்தப்படும் விதம் குறித்து வேதனையான தகவல்களை வேடிக்கையாக கூறினார்.அடுத்து பேசிய மு.க.ஸ்டாலின்,தன் மீதும் தன் மகன் மற்றும் சீப்ராஸ் அதிபர் ஆகியோர் மீதும் செய்யப்பட புகார் பொய்யானது என்றும் அந்த இடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஏலத்துக்கு வந்ததாகவும் அதை தன் மகன் உதய நிதியின் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாகவும் கூறினார். அந்த ஏலத்தில் பங்கு கொண்ட மற்றொரு பிரமுகர் நடிகர் கமலா ஹாசன் எனபதையும் கூறிய முக ஸ்டாலின் ஜெயலலிதாவிற்கு இது போன்ற தவறான தகவல்களை தரும் அதிகாரிகளை சாடினார்.டான்சி நிலத்தை திருப்பி கொடுக்க நேர்ந்த சூழலை சுட்டிக்காட்டிய அவர், திமுக தலைவர்களில் பலரையும் நில அபகரிப்பு என்ற பெர்யரில் பொய் வழக்குகளை போட்டு பின் ஜாமீனில் வெளிவந்தவர்களை மீண்டும் ஏதாவது பொய் வழக்கு போடுவதும் , குண்டர் சட்டத்தை ஏவுவதையும் வழக்கமாக கொண்டுள்ளதை குறிப்பிட்டார். கடைசியாக பேசிய கலைஞர் ஜெயலலிதாவின் அவல ஆட்சியை பற்றி பேசி கழக ஆட்சியில் மின் பற்றாக்குறையை சமாளித்ததைய்ம், தற்போதுள்ள நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.

கடைசியாக பேசிய கலைஞர் ஜெயலலிதாவின் அவல ஆட்சியை பற்றி பேசி கழக ஆட்சியில் மின் பற்றாக்குறையை சமாளித்ததைய்ம், தற்போதுள்ள நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார். தேர்தலின்போது கூடாத பெரும் கூட்டம் கூடியிருந்தது, சிந்திக்க வைக்கிறது...பார்லிமென்ட் தேர்தலை பற்றி....

No comments: