Saturday 28 April, 2012

நெருக்கடிகள்-உழைப்பு-கலைஞர்

வெளியில:
சென்ற சட்ட மன்ற பொது தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்தித்தது!!எதிர் கட்சி அந்தஸ்து கூட பறிபோனது.  
கட்சியில:
வெளியிலே அப்படி என்றால் கட்சிக்குள்ளே வேறு மாதிரி பிரச்சினைகள். ஒரு பக்கம் அழகிரியும், முக ஸ்டாலினும் எதிரும் புதிரும் யார் பெரியவர்? அடுத்த தலைவர் என்று முட்டல், மோதல்கள். மற்றொரு பக்கம் பேராசிரியர் அன்பழகன் வயதில் மூத்தவர்கள்(80-90) கட்சி பணியிலிருந்து விலகி இளைஞர்களுக்கு(60-70) வழி விட வேண்டும் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். 
வீட்டில:
மூன்றாவதாக இந்த வீட்டில் சகோதரர்களை சமாதானபடுத்த சொல்லியும், அந்த வீட்டில் மகளுக்கு கட்சியில் பதவி கேட்டு நச்சரிப்பு!!!
இதெல்லாம் கலைஞருக்கு சுண்டைக்காய் சமாசாரம்!
இதற்கு எல்லாம் சேர்த்து ஒரே வழி பழையபடி பொதுக்கூட்டம்,ஆர்பாட்டம்,இனம்,மொழி, பொது பிரச்சினை  என தீவிரமாக தானே இறங்கினால், சகோதரர்கள் மட்டுமல்ல, பேராசிரியரும் மௌனமாகிவிடுவார்கள். வீட்டிலும் இருக்கும் பிரச்சினைகள் அடங்கிவிடும் என்று கணக்கு போட்டார்.அனேகமாக வெற்றியும் பெற்றுவிட்டார்.
உடல் ஒத்துழைக்காவிட்டாலும் மனதில் உறுதியுடன் செயல்படும் அவரை பார்த்து வியக்கிறேன்!!! அந்த உழைப்பை வணங்குகிறேன்!!!

No comments: