Saturday 25 February, 2012

அண்ணா   திமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையிலும், மக்களுக்கு உபயோகமான வகையிலும் இருக்கவேண்டும் என்பதில் முதலமைச்சர் அறிவுறுத்துவதும், வழக்கமான ஒன்றுதான்.





முதலில் கடுமையான வெய்யிலை தணிக்க தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர்,தண்ணீர், ஆகியவைகளை மக்களுக்கு அளிக்க கட்டளை இட்ட தலைவி,அடுத்த ஆண்டு அன்ன தானம் செய்ய சொன்னார். இந்த ஆண்டு மரம் நடும் விழாவை தானே  முன் நின்று ஆரம்பித்து வைத்தார்.
அரசு மூலம், மழை நீர் சேகரிப்பு,மகளிர் காவல் நிலையம், டாஸ்மாக், பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள், இலவச சீருடைகள், இல்லத்தரசிகளுக்கு, மிக்சி,கிரைண்டர்,மின் விசிறி, என்று அவர் செய்யும் நலத்திட்டங்கள்   நீண்டு கொண்டே போகிறது. மின் தட்டுப்பாட்டை சரி செய்துவிட்டால் மக்கள் பாராட்டுவார்கள். 

No comments: