Monday 20 February, 2012

அந்த காலமும் இந்த காலமும்.....நினைவுகள்:::

அந்த காலமும் இந்த காலமும்.....நினைவுகள்:::
அறுபதுகளில் சைகிள், பணக்கார வீட்டு பசங்க மட்டுமே வைத்திருப்பார்கள்.காலில் செருப்பு கூட இல்லாத நாங்க வாடக சைகிள் எடுத்து ஓட்டி பழகுவோம். சிங்கப்பூர் சைகிள் மிகவும் அதிசியமாக பார்க்கப்படும்.
நான் வேலைக்கு போக சைகிள் தேவைப்பட்டது. வீட்டில் இருந்து ( பஸ் ஸ்டாண்டின் தூரம் + இறங்கி) ஆபீஸ் நடக்கும் தூரத்திற்கு, வீட்டில் இருந்தே  சென்றால் மிகவும் குறைவான தூரம். சம்பளம் Rs .125/= சைக்கிள் விலை 750 ரூபாய். செகண்ட் ஹான்டில் வாங்கினால் நானூறு, ஐநூறு  ரூபாய்க்கு கிடைக்கும்.வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். முதலாளி நல்ல மனிதர், காரில் வீட்டிற்கு செல்லும் வழியில் என்னை இறக்கி விடுவார். அதற்காகவே அவர் கிளம்பும் வரை ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பேன்! ஒரு நாள் அவராகவே கூப்பிட்டு, பிராட்வேயில் உள்ள ஒரு கம்பனியில்,ராபின் ஹூட் சைகிள் வாங்கி கொடுத்தார். அங்கிருந்து சைதாபேட்டை வரை ஓட்டிக்கொண்டு வந்தது வாழ் நாளில் மறக்க முடியாதது.
நான் சொந்தமாக தொழில் தொடங்கியபோது, சாவி ஸ்டாண்டில் ஒரு ஸ்கூட்டர் சாவியும், இரண்டு மோட்டார் பைக் சாவிகளும், ஒரு கார் சாவியும் இருக்கும்.அலுவல வேலையாக யார் வேண்டுமானாலும் எந்த வண்டியையும், எடுத்து செல்லலாம்.

No comments: