Tuesday 17 July, 2012

வித்தியாசமான எம்.பி.::

வித்தியாசமான எம்.பி.:
பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது என்பது கடினம்.தொகுதியில் பார்ப்பது அரிது.உங்க தொகுதி எம்.பி.யை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்.ஏதாவது பொதுக்கூட்ட மேடை அல்லது போராட்டமேடையாகத்தான் இருக்கும்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அப்படியில்லை.பாராளுமன்றம்    நடைபெறாத நேரங்களில், தொகுதி அலுவலகத்தில் சந்திக்கலாம். என்றைக்கு சந்திக்க முடியும் என்ற விவரத்தையும் அறிந்து கொள்ளலாம். 
தொகுதி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, தொகுதியில் உள்ள பொது நல சங்கங்களை கலந்தாலோசித்து,பள்ளிகள்,சமுதாய கூடங்கள்,மின்விளக்குகள், போன்றவற்றிற்கு நிதி ஒதுக்குவதை ஒவ்வொரு வருடமும்,(இது, 2வது ஆண்டு) செய்கிறார். வேலையும் நடக்கிறது.. இவர் வித்தியாசமான எம்.பி.தானே!!

No comments: