Tuesday 10 July, 2012

தெரு நாய்களின் தொல்லைகள்


தெரு நாய்களின் தொல்லைகள்::
இன்று சென்னையில் மட்டுமல்ல, இந்தியா பூராவும், பெரு-சிறு நகரங்கள்,கிராமங்கள் என்று எல்லா இடங்களிலும் தெரு நாய் தொல்லை அதிகமாகிவிட்டது. இரவில் வேலை முடித்து வருபவர்களுக்கு இந்த நாய்கள் தொல்லை பற்றி ஒரு புத்தகமே போடும் அளவிற்கு புகார்கள் வருகின்றன.
ஒரு வாரத்திற்கு முன் ஒரு வயதானவர், "என் பெண் ஐ.டி.யில் வேலை செய்கிறாள்.வீட்டு வாசலில் காரில் வந்து இறங்கினாலும் ஐந்தாறு நாய்கள் காரை சுற்றி நின்று கொண்டு குறைக்கின்றன. எனக்கும் நாய் என்றால் பயம்.நீங்க மாநகராட்சியில் சொல்லி பிடிக்க சொல்லுங்களேன்!!"
நேற்று ஒரு தொழிலாளி "சார்,நைட் ஷிப்ட் முடிஞ்சு சைக்கிளில் வருகின்றபோது நாய் கடித்து விட்டது" போன் பண்ணுங்க சார்!!
"பஸ் ஸ்டாண்டிலிருந்து வீட்டிற்கு வருவதற்குள் 60 ,70 நாய்கள்...துரத்துகின்றன.சில நாய்கள் கல் எடுத்தால் பாய்ந்து வருகின்றன. ஏதாவது பண்ணுப்பா" மகன்.
மாநகராட்சியில் விசாரித்தால் ஓரிரு வண்டிகளே உள்ளதாகவும் நகரம் முழுவதையும் கவர் செய்ய போதுமானதில்லை என்கிறார்கள்.


கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக பல நண்பர்கள் இந்த தெரு நாய்களைஎன்ன  செய்வது  என்று பல ஆலோசனைகளை சொன்னார்கள்.ஒருவர் விஷம் வைத்து விடலாம் என்றார். அது பாவம், என்றதும் மயக்க மருந்து கொடுத்து,எங்காவது கொண்டு விட்டு விடலாம், என்றார், மற்றொருவர்.சரி மாநகராட்சியில் புகார் செய்தால் அவர்கள் போதுமான வண்டிகள் இல்லை என்று உண்மையை சொன்னார்கள். அது மட்டுமல்ல,  செல்லுமிடங்களில் மக்கள்  நாயை  பிடிக்க விடுவதில்லை.எதிர்ப்பு.பல வழிகளில் முயன்று இன்று நாய் வண்டி வந்தே விட்டது.5 அல்லது 6 நாய்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.

No comments: