Monday, 23 January 2012
Sunday, 22 January 2012
தி.மு.க.புள்ளிகள் கைது
முன்னாள் தி.மு.க.அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் கைது:
தி.மு.க புள்ளிகள் கைதாவதும் நீதிமன்றம் அவர்களை விடுவிப்பதும் ஜெ.ஆட்சிக்கு வந்ததும் தினசரி நிகழ்ச்சி ஆகிவிட்டது.
தி.மு.க புள்ளிகள் கைதாவதும் நீதிமன்றம் அவர்களை விடுவிப்பதும் ஜெ.ஆட்சிக்கு வந்ததும் தினசரி நிகழ்ச்சி ஆகிவிட்டது.
பொட்டு சுரேஷில் இருந்து அன்பழகன் வரை கைதாகி இப்போது வெளியே வந்துள்ளனர்.
ஆனால் புரசை ரங்கநாதன் வழக்கில், அவர் மீது போடப்பட்ட வழக்கு, சட்ட விரோதம் என்று விடுதலை செய்யப்பட்டதில் இருந்தே ஜெ.அரசின் நோக்கம் என்ன என்பது தெளிவாகிவிட்டது.
மின் பற்றாக்குறை,சாலை சீரமைப்பு, தானே புயலில் சீரழிந்த கடலூர் மக்களுக்கு நிவாரணம் போன்ற முக்கிய பணிகளில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஓட்டு போட்ட மக்களின் கோரிக்கை,எண்ணம், எதிர்பார்ப்பு,எல்லாம்.
முதல்வர் காதில் இந்த கோரிக்கை விழுமா? நடவடிக்கை எடுப்பாரா?
Friday, 20 January 2012
Thursday, 19 January 2012
புத்தக விற்பனை திருவிழா 2012
புத்தக விற்பனை திருவிழா :
அண்ணா சாலையில் நடக்கும் புத்தக கண்காட்சி சிறிய இடமாக இருப்பதால் நூறு பேர் வந்தாலே நெரிசலாக இருக்கும்.வரும் கூட்டம் வாங்கும் கூட்டம் என்று சொல்ல முடியாது.
பச்சையப்பன் கல்லூரி எதிரில் பள்ளி வளாகம் சரியான தேர்வு!
இந்த வருடம் எல்லா நாட்களிலும் கூட்டம் அலை மோதியதை பார்த்ததில் ஒரு அலாதி மகிழ்ச்சி...கற்றோரை கற்றோரே காமுறுவர்!
நேருக்கு நேர் இடத்தில் மக்கள் உட்கார்ந்து களைப்பாற மிகவும் உதவியது.
கடைசி நாளன்று ஐந்து பேர் மத்தியில் ஒருவர்."சிறு கதை எழுதுவது எப்படி"என்ற கேள்விக்கு விஸ்தாரமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
எல்லா ஸ்டால்களிலும் 4,5 பேர் நின்றுகொண்டு புத்தகங்களை படித்துகொண்டு,
மற்றவர்களை உள்ளே வர விடாமல் நன்மை செய்துகொண்டிருந்தார்கள்.
இந்த வருடம் சில ஸ்டால்களில் கிரடிட் கார்டுகளை அனுமதித்ததால் அதிக அளவில் புத்தகங்கள் வாங்க முடிந்தது.
உயிர்மை,கிழக்கு பதிப்பகங்கள் ஸ்டாலில் கூட்டத்தையும், மனுஷ்ய புத்திரன்,பிரசன்னாவையும் பார்க்க முடிந்தது.
புத்தகங்களின் எடை அதிகமாக இருந்ததால் ஆட்டோ பிடிக்க நேர்ந்தாலும் தேடி வந்த புத்தகங்கள் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேது!
Monday, 2 January 2012
INDIAGATE
மும்பையில் குண்டு வைத்தவர்கள் புகுந்த இடம் தாஜ் ஹோட்டல்.
எதிரே உள்ள இடம் இந்த இந்தியா கேட். இரண்டு கி.மி.தூரத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி டர்மினல்.மிகப்பெரிய ரயில் நிலையம்.கசாப், இங்கிருந்து தப்பியபோது பிடிபட்டவன்.ஒபேரா மற்றொரு இடம்.
அன்றைய தினம் மும்பைவாசி மட்டுமல்ல எந்த ஒரு இந்தியனும் மறக்க முடியாத நாளாகும். இந்த சம்பவத்தில் யாராருக்கு தொடர்பு என்பது இறந்துபோன முக்கிய புலனாய்வு அதிகாரிக்கே வெளிச்சம்.
Wednesday, 28 December 2011
மும்பை அதிசயங்கள்:3 பவர் கட்!!!
மும்பை அதிசயங்கள்:,3
ஆட்டோகாரரிடம் போகவேண்டிய இடத்தை சொன்னதும், "பந்த்ரா" என்றார்.
வியாபாரத்திற்காக கத்து வைத்திருந்த எண்-இந்தி கைகொடுத்தது.
செல்ல வேண்டியதூரம் ராயபேட்டை மணிகூண்டிலிருந்து போலீஸ் ஸ்டேஷன்
வரை இருக்கும். அவர் கேட்டது பதினைந்து! சரியாக நண்பரின் வீட்டு எண் கேட்டு வண்டியை நிறுத்தினார்.இருபது
ரூபாய்க்கு ஐந்து ரூபாய் சில்லறை கொடுத்தார்.
நண்பரின் இடம் மூன்றாவது தளம்.
வேர்த்து விறுவிறுத்து மேலே சென்று காலிங் பெல்லை
அழுத்தினோம்! நண்பர் வந்து கதவை திறந்தார்.
மும்பையில் அதிக குளிர்! நண்பகல் இரண்டு மணிக்கும்
குளிர்தான்.வேர்த்திருந்ததால் :.பேனை போடச்சொன்னேன்!
நண்பர் சொன்னார் பவர் கட்.காலையில்,மாலையில் ஒவ்வொரு மணி நேரம்.
பிளாஸ்டிக் விசிறி கை கொடுத்தது.
திரும்புகையில்,நடந்தே ரயில்வே ஸ்டேஷனக்கு வந்துவிட்டோம்.முப்பது ரூபா
கூப்பனை மெஷினில் செலுத்தி எடுத்துக்கொண்டேன்.
வந்த வண்டியில் ஏறிவிட்டோம். சக பயணி சொன்னார்.அது விரைவு வண்டி என்று!
தானே ஸ்டேஷனில் இறங்கி வேறு வண்டி பிடிக்க முயன்றோம்.மனிதர்களா அவர்கள்
.ஒ வென்று கூச்சலிட்டபடி தள்ளிக்கொண்டு ஓடியதில் எங்களுக்கு புரிந்து விட்டது.இந்த
கூட்டத்தில் நம்மால் ஏற முடியாது.ஏறினாலும், இறங்க வேண்டிய இடத்தில் இறங்க முடியுமா
என்பதும் சந்தேகமே!
வெளியில் வந்து ஆட்டோ பிடித்து டோல்கேட் வரை வந்து,அங்கிருந்து மற்றொரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்!
நல்ல அனுபவம்!!
ஆட்டோகாரரிடம் போகவேண்டிய இடத்தை சொன்னதும், "பந்த்ரா" என்றார்.
வியாபாரத்திற்காக கத்து வைத்திருந்த எண்-இந்தி கைகொடுத்தது.
செல்ல வேண்டியதூரம் ராயபேட்டை மணிகூண்டிலிருந்து போலீஸ் ஸ்டேஷன்
வரை இருக்கும். அவர் கேட்டது பதினைந்து! சரியாக நண்பரின் வீட்டு எண் கேட்டு வண்டியை நிறுத்தினார்.இருபது
ரூபாய்க்கு ஐந்து ரூபாய் சில்லறை கொடுத்தார்.
நண்பரின் இடம் மூன்றாவது தளம்.
வேர்த்து விறுவிறுத்து மேலே சென்று காலிங் பெல்லை
அழுத்தினோம்! நண்பர் வந்து கதவை திறந்தார்.
மும்பையில் அதிக குளிர்! நண்பகல் இரண்டு மணிக்கும்
குளிர்தான்.வேர்த்திருந்ததால் :.பேனை போடச்சொன்னேன்!
நண்பர் சொன்னார் பவர் கட்.காலையில்,மாலையில் ஒவ்வொரு மணி நேரம்.
பிளாஸ்டிக் விசிறி கை கொடுத்தது.
திரும்புகையில்,நடந்தே ரயில்வே ஸ்டேஷனக்கு வந்துவிட்டோம்.முப்பது ரூபா
கூப்பனை மெஷினில் செலுத்தி எடுத்துக்கொண்டேன்.
வந்த வண்டியில் ஏறிவிட்டோம். சக பயணி சொன்னார்.அது விரைவு வண்டி என்று!
தானே ஸ்டேஷனில் இறங்கி வேறு வண்டி பிடிக்க முயன்றோம்.மனிதர்களா அவர்கள்
.ஒ வென்று கூச்சலிட்டபடி தள்ளிக்கொண்டு ஓடியதில் எங்களுக்கு புரிந்து விட்டது.இந்த
கூட்டத்தில் நம்மால் ஏற முடியாது.ஏறினாலும், இறங்க வேண்டிய இடத்தில் இறங்க முடியுமா
என்பதும் சந்தேகமே!
வெளியில் வந்து ஆட்டோ பிடித்து டோல்கேட் வரை வந்து,அங்கிருந்து மற்றொரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்!
நல்ல அனுபவம்!!
Monday, 26 December 2011
மும்பை அதிசயங்கள்-2
மும்பை அதிசயங்கள்-2:
ஞாயிறு விடுமுறை அக்கம்பக்கம் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் பங்கெடுத்ததில் ஜாலியாக சென்றது.
திங்கள் ஒரு மும்பை நண்பரின் கோரிக்கையை நிறைவேற்ற டொம்வில்லி செல்ல ஆயத்தமானோம்.ரயில் நிலையத்தில் டிக்கட் வாங்குமிடத்தில் கூட்டமாக இருக்கும் என்று டோக்கன் கொடுத்தார் நண்பர்.
1,2 , 4 ரூபாய்களின் எண்ணிக்கைகளில் இருந்த அந்த டோக்கன் கூட்டத்தில் டிக்கட் வாங்க நிற்காமல் ரயிலில் செல்ல உதவியாயிருந்தது.டொம்வில்லியில் இறங்கியதும்,ஆட்டோகாரரிடம், செல்லவேண்டிய இடத்தை கூறியதும்,பதினைந்து ரூபாய் என்றார்.மீட்டர் போட சொன்னபோது, கேனையணி பார்ப்பது போல் பார்த்தார். அதெல்லாம் மும்பையில்தான், இங்கெல்லாம்
flat ரேட் தான் என்றார்?
ஞாயிறு விடுமுறை அக்கம்பக்கம் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் பங்கெடுத்ததில் ஜாலியாக சென்றது.
திங்கள் ஒரு மும்பை நண்பரின் கோரிக்கையை நிறைவேற்ற டொம்வில்லி செல்ல ஆயத்தமானோம்.ரயில் நிலையத்தில் டிக்கட் வாங்குமிடத்தில் கூட்டமாக இருக்கும் என்று டோக்கன் கொடுத்தார் நண்பர்.
1,2 , 4 ரூபாய்களின் எண்ணிக்கைகளில் இருந்த அந்த டோக்கன் கூட்டத்தில் டிக்கட் வாங்க நிற்காமல் ரயிலில் செல்ல உதவியாயிருந்தது.டொம்வில்லியில் இறங்கியதும்,ஆட்டோகாரரிடம், செல்லவேண்டிய இடத்தை கூறியதும்,பதினைந்து ரூபாய் என்றார்.மீட்டர் போட சொன்னபோது, கேனையணி பார்ப்பது போல் பார்த்தார். அதெல்லாம் மும்பையில்தான், இங்கெல்லாம்
flat ரேட் தான் என்றார்?
Subscribe to:
Posts (Atom)


